India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகரில் இன்று (ஜூலை 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
“சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப்பொருள் உபயோகம் காரணமாக உள்ளது. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவதுடன் கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடக்காமல் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்” என சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து அதற்கு பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க<
சேலம்: ஜூன் 30-ந்தேதிக்குள் ரேஷன் கார்டுடன் கைரேகை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்ற செய்தி வதந்தி என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. AAY மற்றும் PHH அட்டைதாரர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்வது அவசியம், ஆனால் அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் சேலம் மக்களே உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை அப்டேட் செய்து கொள்ளுங்கள்!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 07- ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக இன்று (ஜூலை 05) முதல் ஜூலை 08 வரை சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று 2 விரைவு பேருந்துகளும், நாளை 2 விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என அதிகாரிகள் தகவல்!
கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் பட்டாக்களை<
சேலம் மேற்கு,தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூர். ஓமலூர், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல்,பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் நத்தம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது <
கர்நாடகாவில் பிறக்கும் காவிரி ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைகிறது. காவிரி நீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது.இந்தநிலையில் வாய்கால் தூர்வாரததால் பெரும்பகுதி நீர் கடலில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.