India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமோற்சவ விழா வரும் 24ம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக சேலம் போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் 24ம் தேதி முதல் 2ஆம் தேதி வரை 13 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 9 மணி 9:30 மணி 10:30 மணி என பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவிப்பு.

அஸ்தம்பட்டி, பேளூர், கே.ஆர்.தோப்பூர், சங்ககிரி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அஸ்தம்பட்டி, வின்சென்ட், மறவனேரி, ஏற்காடு, 4 ரோடு, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்கொட்டை,கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, இரும்பாலை, படைவீடு, சங்ககிரி மேற்கு, சங்ககிரி ரெயில் நிலையம், ஆகிய பகுதிகளில் இருக்காது.

சேலம் செப்.18 நாளை முகாம் நடைபெறும் இடங்கள்;
▶️அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபம் திருவிக ரோடு.
▶️தளவாய்பட்டி சமுதாயக்கூடம் தளவாய்பட்டி.
▶️நரசிங்கபுரம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விநாயகபுரம். ▶️கொங்கணாபுரம் ஆனந்த மஹால் ரங்கம் பாளையம்.
▶️பனமரத்துப்பட்டி கிராம ஊராட்சி அலுவலகம் தும்மல் பட்டி.
▶️தலைவாசல் அம்மன் திருமண மண்டபம் நாவகுறிச்சி.

சேலம் மாவட்டத்தில் ந இன்று (செப்-17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை வழங்குங்கள்;
▶️புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் மண்டபம் சின்ன புத்தூர்.
▶️ இடங்கண சாலை இடங்கண சாலை திருமண மண்டபம்.
▶️கன்னங்குறிச்சி கே ஏ டி திருமண மண்டபம் கன்னங்குறிச்சி. ▶️அயோத்தியாபட்டணம் பருத்திக்காடு ஐசிஎம்சி வளாகம்.
▶️ஆத்தூர் சந்தோஷ் திருமண மண்டபம் மோட்டூர். ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெள்ளாளப்பட்டி.

கூட்டுறவுத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கடன் திட்டம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை அறிவித்துள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம், கால்நடை கடன் நகை கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இந்த வங்கிகள் மூலம் 4,321 கோடிநகை கடன் மகளிர் கடன் வழங்க இலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை (06054/06053) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வரும் செப்.30 முதல் அக்.29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல், கரூர், நாமக்கல், சாத்தூர், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

சேலம் மாவட்டத்தில் இன்று (16.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, பெண்கள் தயாரித்த சேலத்தின் புகழ்பெற்ற தட்டு வடை செட்டை ஆர்வத்துடன் ருசி பார்த்தார். மேலும், மூலிகை தேநீரையும் பருகினார்.

சேலம் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள ▶️புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் மண்டபம் சின்ன புத்தூர் ▶️ இடங்கள சாலை இடங்கள சாலை திருமண மண்டபம் ▶️கன்னங்குறிச்சி கே ஏ டி திருமண மண்டபம் கன்னங்குறிச்சி ▶️அயோத்தியாபட்டணம் பருத்திக்காடு ஐ சி எம் சி வளாகம்
▶️ஆத்தூர் சந்தோஷ் திருமண மண்டபம் மோட்டூர் ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெள்ளாளப்பட்டி

சேலம் மாநகராட்சியில் இன்று (செப்டம்பர் 16) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களும், தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளது. புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.