India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவின் அலபாமாவில் நடைபெற்று வரும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில், சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் தேவராஜ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007 தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!
சேலம்: தளவாய்பட்டியில் உள்ள மண்டல கலை பண்பாட்டு மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும், 10ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தப்பாட்டம், சிலம் பாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் சேரலாம். விண்ணப்பங்கள், விபரங்களுக்கு, 0427 2906197, 99526 65007களில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி துவங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 432 முகாம்கள் நடத்தப்படுவதாகவும முகமின் வாயிலாக அனைத்து தரப்பினரின் மனுக்களையும் பெற்று நிவர்த்தி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
சேலம்: கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனி அருகே சந்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அங்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு பூஜை முடிந்த பின், தக்காளி சாதம், சுண்டல் பிரசா தமாக வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட, 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படவே உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப் பட்டனர். கிச்சிப் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <
▶️ IBPS வங்கி பணியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 21ஆம் தேதிக்குள் https://www.ibps.in/ இணையதளத்தில் சென்று Click Here for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து, பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் ▶️ வயது 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்▶️ இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 21.07.2025 க்குள் பட்டப்படிப்பு சான்றினை சமர்ப்பித்தால் விண்ணப்பிக்கலாம்.SHAREit
சேலம் ஜூலை 6 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 9 மணி மாநில அளவிலான தேக்ஹோண்டா போட்டிகள் (பனங்காடு)▶️ காலை 10 மணி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்குறைஞ்ஞர்கள் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் (மாநகராட்சி தொங்கும் பூங்கா) ▶️காலை 10 மணி ஆதி தமிழர் பேரவையின் சார்பில் அருந்ததியர் சமூகம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் விழா (திருவாகவுண்டனூர்)
சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் நேற்று காலை காய்கறிகள் வாங்க வந்த பெண்களை, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.