Salem

News February 11, 2025

இந்த ரயில் சேலம் டவுன் வரை மட்டும் இயங்கும்

image

சத்திரம் மார்க்கெட் ரயில்வே நிலையத்தில் உள்ள யார்டில் பராமரிப்புப் பணி நாளை (பிப்.12) விருத்தாச்சலம்- சேலம் ரயில் (76815) நாளை விருத்தாச்சலத்தில் மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு சேலம் டவுன் ரயில்வே நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். சேலம் டவுன்- சேலம் ஜங்ஷன் இடையே ஒரு பகுதி ரத்துச் செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News February 11, 2025

தந்தையை கொன்ற மகன் உட்பட 3 பேர் கைது

image

காடையாம்பட்டியில் பொன்னுசாமி என்பவர் காவலாளியாக மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சின்னசாமி என்பவர்,சொத்துபிரச்சனையில் நண்பர்களுடன் இணைந்து, தந்தை (பொன்னுசாமியை) கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமி, உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை.

News February 11, 2025

தைப்பூசம்- காளிப்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, இன்று (பிப்.11) சேலம் மாவட்டம், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், ஆட்டையாம்பட்டி வழியாக காளிப்பட்டி கந்தசாமி முருகன் திருக்கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 11, 2025

க்யூ.ஆர். கோடு மூலம் ரயில் டிக்கெட் எடுப்போர் அதிகரிப்பு!

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள 78 ரயில்வே நிலையங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் டிக்கெட் பெற க்யூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40% கடந்துவிட்டது.வரும் ஆண்டில் 60%-க்கு மேல் உயரும்.அந்த அளவிற்கு மக்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது என்றனர் ரயில்வே அதிகாரிகள்.

News February 11, 2025

மாணவர்கள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

image

சேலம், எடப்பாடி அருகே தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் பலத்த காயம் அடைந்த மாணவன் உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்ததை அடுத்து தனியார் பள்ளி வளாகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 11, 2025

சேலத்தில் தொடரும் மது வேட்டை: சிக்கும் பெண்கள்

image

சேலம் வீராணம் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுவளவு மாரியம்மன் கோவில் அருகே யோகலட்சுமி மற்றும் மோகன் ஆகியோர் மது பாட்டில்களை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். அதனையடுத்து அவரிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெண்கள் மது வழக்கில் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாகிறது.

News February 11, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இன்று (10.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கடைசி நாள்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்த ,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்.28ஆம் தேதியாகும். இதற்குள் உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளம் வாயிலாக உடனடியாக விண்ணப்பித்து, கல்வி உதவித் தொகை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

News February 10, 2025

கவன சிதறல் மரணத்திற்கு வழிவகுக்கும் 

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 10) ”சாலையை கடக்கும்போது, சாலையில் கவனத்தை வையுங்கள் தொலைபேசியில் அல்ல: கவனம் சிதறல் மரணத்திற்கு வழிவகுக்கும்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 10, 2025

சேலத்தில் மது கடைகளையும் மூட உத்தரவு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் தினத்தை ஒட்டி, சேலத்தில் உள்ள எம்எல்1, எம்எல் 2, எம்எல்3, எம்எல் 3ஏ உள்ளிட்ட அனைத்து மது பானக் கடைகளும், மதுபானகிளப்புகளை மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி விற்பனை செய்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!