India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

சேலம் மக்களே, IGI விமான சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 12வது முடித்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வருகிற செப்.21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

ரயில் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக, நாளை மறுநாள் (செப்.20) மயிலாடுதுறை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (16811) மல்லூர் வரையிலும், சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) மல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். இந்த ரயில்கள், மல்லூர்-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, சேலம், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் மதுப்போதையில் வாகனம் ஓட்டிய 154 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக 3 மாதத்திற்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகரில் இன்று (18.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

சேலம் சதுரங்காடி, கற்பகம் திருமண மண்டபம், ஓமலூர், செவ்வாய்சந்தை ரோட்டில் உள்ள சமுதாயக்கூடம், மல்லமூப்பம்பட்டியில் சாந்தி ராதாகிருஷ்ணன் திருமண மாளிகை, குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நாளை (செப்.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு நடைபெறுகிறது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு!

சேலம், ஓமலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

சேலம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக மாறியதும் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டையும் தி.மு.க கொண்டிருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்தவர்களுக்கு இப்போது ரத்தினக் கம்பளம் விரிப்பதாகவும் அவர் சாடினார்.

சேலம் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Sorry, no posts matched your criteria.