India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
சேலம் , ஆத்தூர் அருகே அரசுப் பேருந்துக் கவிழ்ந்த விபத்தில் அலைபேசியில் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பிரேக் பழுதால் அரசுப் பேருந்து விபத்து என்று கூறப்படுவது தவறு என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பைத்தூர் அருகே கல்லுக்காடு பகுதியில் நகரப் பேருந்து கவிழ்ந்து 6 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்தில் 2 மாணவர்கள் சண்டையிட்டு தாக்கிக் கொண்டதில் ஒரு மாணவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து தாக்கிய மற்றொரு மாணவனை எடப்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டுவருகிறது.
நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள். அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்திலிருந்து கிரி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் பாதயாத்திரையாக கிராமத்திலிருந்து பழனிக்கு சென்று, விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று நேற்று தைப்பூசம் வந்தவர்கள் இன்று சேலம் மாவட்டம் அருகே ஓமலூர் நெடுஞ்சாலை ஓரமாக சென்று கொண்டுள்ளார்கள்.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா அறக்கட்டளை பெயரில் பணம் இரட்டிப்பு மோசடி செய்த வழக்கில் கைதான அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு, ஜெயபிரதா, சையத் மஹ்மூத் ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் பிப்.17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், ஆத்தூர் அருகே தவளைப்பட்டி சென்ற 33 ஆம் எண் அரசு பேருந்து மலையற்றத்தின்போது பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி சென்று 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள படையப்பா நகர் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்த தண்டபாணி(25) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ₹1200 ரூபாயை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் திப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், அவரது பேரன் மோஹித் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மேச்சேரியில் இருந்து குள்ளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் மோகித் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈஸ்வரன் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 11) உங்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிசார் செயலிகளுக்கு, சைபர் குற்றவாளிகளால் எளிதில் தகர்க்க (Crack) முடியாத அளவில் கடினமான கடவுச் சொற்களை (Password) அமைக்கவும். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளத
தைப்பூசத்தை முன்னிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் இன்று (பிப்.11) அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, திருக்கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.