Salem

News February 14, 2025

சிறப்பு ரயிலில் முன்பதிவு அதிகரிப்பு – கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு சேலம் வழியாக செல்லும் கோவை-பனாரஸ் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்.16-ம் தேதி கோவையில் இருந்து பனாரஸூக்கும், பிப்.22- ம் தேதி பனாரஸில் இருந்து கோவைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால் தற்போது 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள்-3, ஸ்லீப்பர் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

image

தம்மம்பட்டி அடுத்த கொண்டையம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தம்மம்பட்டி பகுதியில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவரை சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News February 14, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12515) வரும் பிப்.16,23,மார்ச் 02,09,16 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (22643) வரும் பிப்.17,18,24,25,மார்ச் 03,04,10,11,17 தேதிகளிலும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கட்டாக் ரயில் நிலையத்தில் நிற்காது. ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News February 14, 2025

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

image

தர்மபுரியைச் சேர்ந்த இளம்பெண் முதுகில் பாய்ந்த கத்தியினை, சிக்கலான அறுவை சிகிச்சை மூலம், சேலம் அரசு மருத்துவமனையின் இருதயம் மற்றும் நுரையீரல் பிரிவு அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் ராஜராஜன், விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் அகற்றி உள்ளனர்.  மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தியை அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த குழுவினரை கல்லூரி முதல்வர் மீனாதேவி பாராட்டினார்.

News February 14, 2025

சேலம் மாவட்டத்தில் 9,200 ஏக்கரில் சாகுபடி

image

சேலம் மாவட்டத்தில் சுமார் 9,200 ஏக்கர் பரப்பளவில் பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி, செவ்வாழை, கதலி, நேந்திரன் மற்றும் ஜி 9 போன்ற இனங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு மானிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

விவசாயிகளுக்கு ரூபாய் 33.87 கோடி மானியங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.33.87 கோடி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (13.02.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News February 13, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்டத்தில் இன்று (13.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

கார் டயர் வெடித்த விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு 

image

சேலம், மகுடஞ்சாவடி, அ. தாழையூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பணி முடித்துவிட்டு மாலையில் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது சீரகாபாடி அருகே முன்பக்க டயர் வெடித்ததில், சாலையின் செண்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

News February 13, 2025

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம்

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம் ஸ்ரீ சிவகாமி அம்மாள் சமேத சீர்காழிநாதர் மற்றும் விநாயகர், அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், காலபைரவர் திருக்கோயிலில், மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி 1,000க்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும், வரும் பிப்.16- ம் தேதி கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

error: Content is protected !!