India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் பா.ஜ.க. அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அம்பேத்கர் சிலையை நோக்கி செல்ல முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் கைது செய்தனர்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சேலம் மாநகரப் பகுதிகளில் பல்வேறு அளவுகளில் குழாய் உடன் கூடிய மண்பானைகள், சமையலுக்கு தேவையான மண்பானை சட்டிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் மண்பானைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
அரசின் டாஸ்மாக் 1000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பாஜக அறிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், உள்ளிட்ட மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும், கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்த முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளைக் கடைபிடிக்க விவசாயிகளுக்கு சேலம் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலம் : ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 வது தெற்கு ஆசிய ரெட் டென்னிஸ் கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 14,17,19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கான இந்த தேர்வு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது . கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்குப் பகிரவும்.
ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்.56106 ஈரோடு – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நாளை 18.03.2025 ஈரோடு கரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் சந்திப்புக்கு இயக்கப்படாது; அன்று கரூரில் இருந்து காலை 09.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று (மார்ச். 16) தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், ஹெட்லைட்டை மாற்றலாம், தலையை மாற்ற முடியாது என விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வைட்டமின் ‘ஏ’ சத்து குறைபாட்டால் வறண்ட விழித்திரை, மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சேலத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை 5வயது வரை உள்ள 2,62,674 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ள ஆரம்ப,துணை மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படும். இதை குழந்தை வைத்துள்ள மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் சேலத்தில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள். ▶️முத்துமலை முருகன் கோயில் (ஏத்தாப்பூர்) ▶️காவடி பழனி ஆண்டவர் திருக்கோயில் (சூரமங்கலம்) ▶️காளிப்பட்டி முருகன் கோயில் (ஆட்டையாம்பட்டி) ▶️கந்தாஸ்ரமம் திருக்கோயில் மற்றும் குமரகிரி தண்டாயுதபாணி கோயில் (சேலம் மாநகர்) ஆகும். இதை மற்ற பக்தர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
சேலம், ஆத்தூர் பகுதி சேர்ந்த அம்மம்பாளையத்தில் இரண்டு பெண்கள் நேற்று, இரவு 8:00 மணி அளவில் மோட்டார் பைக்கில் அம்மம்பாளையம் சாலையை கடக்கும் பொழுது ஆத்தூர் டு சென்னை சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து 2 பெண்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஒரு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல். .
Sorry, no posts matched your criteria.