India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வேக்கு நிலம் கொடுத்த சேலம் அமானி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட 15 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 30 லட்சம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் ஜப்தி பொருட்கள் ஏலத்துக்கு வருகிறது. வாதி, பிரதிவாதி தவிர யார் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்து கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஏப்.03- ம் தேதி காலை 10 முதல் மாலை 05.45 மணிக்குள் சேலம் அஸ்தம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஏலம் நடக்கிறது
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
சேலம் மாநகரில் இன்று (24.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024- 2025 ஆம் ஆண்டிற்கான அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதை அடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 லட்சத்திற்கான காசோலை இன்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி அதிகாரிகளிடம் வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தை திருமணச் சட்டம் 2006ன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணும் 21 வயது நிறைவடையாத ஆணும் திருமணம் செய்து கொண்டால் இதில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி குற்றம் என்றும் இதற்காக இரண்டு வருடம் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மதநல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024- 2025 ஆம் ஆண்டிற்கான அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியம் வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதை அடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 10 லட்சத்திற்கான காசோலை இன்று சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் பிருந்தா தேவி அதிகாரிகளிடம் வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் மார்ச் 28- ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ. ஆ. ப. தெரிவித்துள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்கள் தங்களது கேஒய்சி பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் பகுதியின் அருகாமையிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ஐஎம்பிடிஎஸ் மூலம் நாளை மார்ச் 25-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையங்களில் 36 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இன்று மார்ச் 24- ஆம் தேதிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மைக் கட்டிட வளாகம், சேலம் 636001 முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.