India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அவர்களுக்கு குடும்பத்தினர்களுக்கு ஏதேனும் சட்டம் சார்ந்த உதவிகள் தேவைப்பட்டால் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள இலவச சட்ட ஆலோசனை மையத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞர் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (அக்டோபர்.08) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சேலம் வழியாகச் செல்லும் கன்னியாகுமரி-திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22503) இன்று (அக்.08) மாலை 05.25 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் 03.35 மணி நேரம் தாமதமாக இரவு 09.00 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மக்களே, தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சிலின் கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 12 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமமாக மாதம் ரூ.38,908/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

சேலத்தில் நாளை(அக்.9) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: 1)அதிகாரப்பட்டி சமுதாயக்கூடம் செங்காடு 2)நிலவாரப்பட்டி ஸ்ரீ விஜய மஹால் கெஜல்நாயக்கன்பட்டி 3) ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை 4) கெங்கவல்லி ஸ்ரீ குமரன் மஹால் கெங்கவல்லி 5)நங்கவள்ளி எஸ்விபி நர்சரி பிரைமரி பள்ளி காட்டம்பட்டி 6)தாரமங்கலம் கேஜி திருமண மண்டபம் அமரகுந்தி 7)மகுடஞ்சாவடி கள்ளர் சமுதாயக்கூடம் வைகுண்டம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் தினம் தோறும் 1,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் அரசுப் பேருந்துகளில் பட்டாசுகள் எடுத்துச் செல்லக் கூடாது; இதை மீறி எவரேனும் பட்டாசுகளை எடுத்துச் சென்றால், அபராதம் விதிக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.விபத்துகளைத் தடுக்கும் விதமாக இந்த விதிமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சேலம்: நல்லமாத்தி மற்றும் நின்னாங்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், கூடமலை பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்குத் பள்ளி தொடங்கும் நிலையில் பேருந்து காலை 7 மணிக்கே சென்று விடுவதாக கூறப்படுகிறது.இதனால் பேருந்து நேரத்தை மாற்றி அமைக்கக் கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சேலம் அக்டோபர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள் 1)காலை 10 மணி மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் கோரி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் 2) காலை 11 மணி ஏ ஐ டி யு சி தமிழக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் 3)காலை 12 மணி சேலம் மாவட்ட நிர்வாகத்தையும் மாநகர காவல் துறையும் கண்டித்து தமிழ் புலிகள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்

சேலம் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
Sorry, no posts matched your criteria.