Salem

News March 22, 2025

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும் இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது

News March 22, 2025

சேலத்தில் நாளை மாபெரும் மாரத்தான் போட்டி

image

போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்று மாரத்தான் போட்டியை துவக்கி வைக்கவுள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது காலை 6:00 மணிக்கு இந்த மாரத்தான் போட்டி துவங்க உள்ளது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News March 22, 2025

டெல்லி அணிக்கான களமிறங்கும் சேலம் நடராஜன்

image

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜன், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மார்ச் 24 ஆம் தேதி லக்னோ அணிக்காக நடைபெறும் போட்டியில் நடராஜன் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் நடராஜன் சிறப்பாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 22, 2025

சேலம்: பணம் மோசடி வழக்கு EOW-க்கு மாற்றம்

image

சேலம், சொர்ணபுரி பகுதியில் திருவண்ணாமலை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பணம் இரட்டிப்பு தருவதாகக் கூறி பல நபரிடம் பணம் பெற்றுள்ளார். இதனையறிந்த போலீசார், நிறுவனத்தில் சோதனை செய்து, 3 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கானது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

சேலம் மார்ச் 22 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் மார்ச் 22 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி உலக நீர் தினத்தை முன்னிட்டு கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி▶️ காலை 10 மணி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டம் ▶️ காலை 11 மணி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்

News March 22, 2025

ரூ.1,87,000 வரை சம்பளம்; சேலம் TIDEL Park வேலை!

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

சேலத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்

image

சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்கியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். போலீசார் விசாரணையில் ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சேலத்தில் ரவுடிகளின் பட்டியலையும் உளவுப்பிரிவு போலீசார் மூலம் மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

News March 22, 2025

சேலம்: அணைமேடு முருகன் சிலை வரிசீரமைப்பு மும்முரம்

image

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தாரமங்கலம் அணைமேட்டில் கட்டப்பட்ட முருகன் சிலை தமிழ்நாடு மட்டுமல்லாது உலக அளவில் பேசப்பட்டதை நம் எல்லோரும் அறிந்ததே.
முருகன் சிலையின் மறுசீரமைப்பு பணி 80சதவீதம் முடிவுற்ற நிலையில் முன்பு இருந்த உடல் அமைப்பை முழுவதுமாக மாற்றி, முக அமைப்பை மாற்றியும், நெஞ்சுப் பகுதியில் சிறிய சிவன் சிலையும் முருகர் சிலையும் உள்ளது போல வடிவமைத்து உள்ளனர்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்

News March 22, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

image

“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

சேலம் அருகே துயர நிகழ்வு

image

சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஓட்டுநர் ஜெயவேல்(26) இன்று (மார்ச் 21)பள்ளி வேலை எடுத்துக்கொண்டு பணிக்கு செல்வதற்காக வேனை இயக்கிய போது தந்தையை பார்ப்பதற்காக ஒன்றரை வயது குழந்தை ரோஹித் ராஜ் வேனின் பின்புறம் வந்தது இதனை அறியாமல் வேனை பின்னோக்கி இயக்கியதில் சக்கரத்தில் நசுங்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

error: Content is protected !!