India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று (செப்.17) காலை 10 மணிக்கு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (செப்.17) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 17,014 கனஅடியிலிருந்து 12,083 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110.050 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 78.479 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப்.20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் செப்.20ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம்.
சேலம் மாவட்ட நிர்வாகத்தால் ஓமலூர் டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் செப்.19ம் தேதி காலை 09.00 மணி முதல் ஆட்சியர் தலைமையில் கல்விக்கடன் மேளா நடைபெற உள்ளது. இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விக்கடன் மேளாவில் பங்கேற்று பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தில் திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை சிறக்க வேண்டி சினிமா விநாயகர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில், மேயர் ராமச்சந்திரன், ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் நிர்வாகிகள் கீதா ராமநாதன், டாக்டர் ராதிகா ராணி, ஸ்ரீரேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை (17.09.2024) அன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுவதை யொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி கலெக்டர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டம், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி, ஆகியோர் இன்று (16.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாணவர் அணிக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (செப்.18) அன்று சேலம் மாவட்ட திமுக கலைஞர் மாளிகையில் வழங்கப்பட உள்ளது. தகுதிகள்: 30 வயதிற்குள், டிப்ளோமா அல்லது பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். நேர்காணல் செப். 22ம் தேதி காலை 8.30 முதல் 11.30 வரை நடைபெறும் என சேலம் மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் கலெக்டர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 16ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள், உறுப்பினர்கள் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் பரிசீலனை செய்ய ஏதுவாக அவற்றை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) வருகிற 20ம் தேதிக்குள் நேரில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.