India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஆத்தூர், முல்லைவாடி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நாட்டு ரகம் நெட்டை ரகத்தில் 23,500 தென்னங்கன்றுகள் உள்ளன. ஆண்டுக்கு மரத்துக்கு தலா 100 முதல் 150 காய்கள் வரை அறுவடைச் செய்யலாம். வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த நெட்டை ரக கன்று தலா ரூபாய் 65-க்கு விற்கப்படுகிறது என தோட்டக்கலை அலுவலர் இலக்கியா தெரிவித்துள்ளார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக வரும் ஜன.04,11,18 ஆகிய தேதிகளில் குண்டூரில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜன.06- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து காக்கிநாடாவிற்கும் சிறப்பு ரயில்கள் (07181/07182) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 6ஆம் சுற்றாக அனைத்து கால்நடைகளுக்கும், கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி இலவச முகாம் நாளை(டிச.16) முதல் ஜன.,5 வரை நடைபெற உள்ளது. இந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக வரும் ஜன.04,11,18 ஆகிய தேதிகளில் குண்டூரில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஜன.06- ஆம் தேதி கொல்லத்தில் இருந்து காக்கிநாடாவிற்கும் சிறப்பு ரயில்கள் (07181/07182) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து (20.12.24) முதல் (5.01.25) வரை அனைத்து ஊராட்சி கால்நடை மருத்துவமனையிலும், கால்நடைகளுக்கு இலவசமாக NADCP 6வது சுற்று தடுப்பூசி போடப்படும் என்றும், இதனை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (டிச.14) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் வரும் டிச.19 அன்று மாலை 03.30 மணிக்கு சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் வரும் டிச.19 அன்று மாலை 03.30 மணிக்கு சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், ஆத்தூர், சங்ககிரி உள்பட 11 அலுவலகப் பகுதிகளில், 7,622 வாகனங்களை சோதனை செய்தனர். அதில் சாலை விதிகளை மீறியவர்களில் 142 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மொபைல் போனில் பேசிய படி வாகனம் ஓட்டிய 41 பேர், அதிவேகமாக சென்ற 33 பேர் என 142 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.