Salem

News December 20, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

ஓசூர் ரயில்வே யார்டில் பராமரிப்பு காரணமாக, ஜன.07, 08 தேதிகளில் எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678), ஜன.08, 09 தேதிகளில் பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (12677) சேலம், ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுவதால் ஓசூர், தர்மபுரி ரயில் நிலையங்களைத் தவிர்க்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2024

சேலம்: இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்!

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் கட்டணம் இன்றி பதிவு செய்து இலவசமாக சான்றிதழ்களை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 20, 2024

சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

image

சென்னை சென்ட்ரல்- கொல்லம் சிறப்பு ரயில் (06113) வரும் டிச.21 முதலும், கொல்லம்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06114) வரும் டிச.22 முதலும் இரண்டடுக்கு ஏ.சி. பெட்டி-1, மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி-5, 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டி-8, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி-1, லக்கேஜ் பெட்டி-1 இணைத்து இயக்கப்படுகின்றன. இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News December 20, 2024

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு 

image

சேலம், மேட்டூர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது அணைக்கு வரும் நீரின் அளவு 4,000 கனடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1300 கன அடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 91 டிஎம்சி ஆகவும் நீர்மட்டம் 119 அடியாகவும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு நாட்களில் மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 20, 2024

பெயர் பதிவு செய்ய டிச.31 கடைசி நாள்

image

பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவுச் செய்வதற்கான அவகாசம் வரும் டிச.31- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்பிறகு நீட்டிப்பு வழங்க இயலாது. இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்கள், உடனடியாக சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 20, 2024

2 பைக்குகள் மோதிக்கொண்டதில் வாலிபர் பலி

image

ஜலகண்டாபுரம் அருகே செலவடையைச் சேர்ந்தவர் காவேரி, மோகன்ராஜ். இருவரும் கடந்த 16ஆம் தேதி பைக்கில் ஜலகண்டாபுரம் பக்கம் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்தனர். சமட்டியூர் அருகே வந்தபோது எதிரே வந்த பைக், காவேரி ஓட்டிச் சென்ற பைக்கியும் நேருக்கு நேர் மோதியது. இதில் காவேரி, மோகன்ராஜ் ஆகிய 2 பேர் அடிபட்டு சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் மோகன்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News December 20, 2024

மாவட்ட காவல் இரவு பணி அதிகாரிகள்

image

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் இரவு நேரங்களில் அந்தந்த பகுதிக்குக் காவல் நிலைய அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் குற்றச் செயல்கள் நடப்பது தடுக்கவும், விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையிலும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி ரோந்து பணியில் ஈடுபடும் இன்றைய அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News December 20, 2024

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்றைய அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

News December 19, 2024

சேலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்

image

ஜன.04 முதல் ஜூன் 28 வரை சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், ஜன.05 முதல் ஜூன் 29 வரை ஞாயிற்றுக்கிழமைதோறும் ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் (07355/ 07356) இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். நாமக்கல், கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

News December 19, 2024

சேலத்தில் டிச.23இல் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

சேலம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் வரும் டிச.23ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!