Ramanathapuram

News March 12, 2026

இராமநாதபுரம்: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 12, 2026

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

News March 12, 2026

இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News March 12, 2026

ராம்நாடு : இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

image

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி,ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 12, 2026

ராமேஸ்வரத்தில் ஹோட்டல்கள் மூடல்

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் 20-ம் மேற்பட்ட ஹோட்டல்கள் நேற்று மூடப்பட்டன. பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். மேலும் திறந்திருந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

News March 11, 2026

ராம்நாடு: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

ராமநாதபுரம் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News March 11, 2026

ராம்நாடு: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற தளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க

News March 11, 2026

இராம்நாடு: G.H-ல் இவை எல்லாம் இலவசம்

image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. ரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News March 11, 2026

இராம்நாடு: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

image

இராம்நாடு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News March 11, 2026

இராமநாதபுரம்: 7 உயிர்கள் பலி; வெறிநாய்கள் அட்டூழியம்

image

இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அய்யன் தோப்பு பகுதியை சேர்ந்த நைய்னாமுகமது என்பவர் ஆடு வளர்த்து வந்தார். அவர் நேற்று இரவு பட்டியில் 8 ஆடுகளை அடைத்து இருந்தார். இரவில் வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளது. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 1 ஆடு காயத்துடன் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிர்வாகத்தினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை.

error: Content is protected !!