India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் தனியார் மஹாலில் நேற்று மார்ச்.13 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மீட்பு கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி அருகே உள்ள கலையூர் கருங்குளம் கிராமத்தில் ராமாயி என்ற மூதாட்டி (82) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்குக்கு பிறகு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல்தானம் செய்த ராமாயி குடும்பத்தாரிடம் மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

ராம்நாடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறுவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

இராமநாதபுரம் மாவட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு, இருசக்கரவாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆகையால் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் M.A முனியசாமி தலைமையில், ஓபிஎஸ் அணியினர் தங்களை நேற்று அதிமுகவில் (மார்ச்.12) இணைத்துக்கொண்டனர். அதன்படி இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய ஓபிஎஸ் அணியினை சேர்ந்த பாஸ்கரன், ராமச்சந்திரன், நாகேந்திரன், தாமோதரன், துரை ஆகியோர் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், பரமக்குடி மற்றும் சத்திரக்குடி பகுதிகளில் ID ஒட்டி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள், ATM கார்டுகள், லேப்டாப்கள் மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், பரமக்குடி மற்றும் சத்திரக்குடி பகுதிகளில் ID ஒட்டி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகங்கள், ATM கார்டுகள், லேப்டாப்கள் மொபைல் போன்கள், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.