Ramanathapuram

News December 18, 2024

மண்டபம் தென் கடல் படகுகள் தொழிலுக்கு செல்ல அனுமதி

image

மண்டபம் தென் கடலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு நாளை (டிச.19) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். கடலுக்கு செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, படகு பதிவு, காப்பீடு சான்று, மீன்பிடி உரிமம், மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

ராமநாதபுரத்தில் போலி குறித்து புகார் அளிக்கலாம்

image

மக்கள் உரிமையாளர்கள் தயாரிக்கும் பொருட்கள், கடைகளில் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், காபி, டி தூள், இதர பொருட்களில் ஏதேனும் விலை உயர்ந்த நிறுவன பெயர்களை கொண்ட போலியான பெட்டிகள், பைகள், சின்னம் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498188455 அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

News December 18, 2024

ராமநாதபுரம் காவல்துறையின் அன்பான வேண்டுகோள்

image

பொதுமக்கள் மற்றும் உரிமையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களான டீத்தூள் சோப்புத்தூள் ஆடைகள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இதர பொருட்கள் எதுவாயினும் விலை உயர்ந்த கம்பெனியின் பெயர் போலியாக அச்சிடப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஒரு கம்பெனியின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498188455 அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

News December 18, 2024

மாநில அளவிலான வினாடி வினா போட்டி

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் (21.12.2024) சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணி அளவில் ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது.அலுவலகம்,பள்ளி, கல்லூரியில் பணி புரியும் அடையாள அட்டையினை கொண்டு வந்தால் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News December 18, 2024

இராமநாதசுவாமி கோயில் நடையடைப்பு

image

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச.23 அன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி அன்று நடையடைக்கப்பட உள்ளது. டிச.,23 இல் அஷ்டமி பூப்பிரதட்சணத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்து 3:30 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனைத் தொடர்ந்து கால பூஜை நடக்கும். எனவே காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்த்து கொள்ளவும்.

News December 18, 2024

இரவு ரோந்து அதிகாரியின் விவரம் வெளியீடு

image

இன்று (17.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ள அட்டவணையை இராமநாதபுரம் காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்கள் அல்லது 100 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2024

வீட்டில் பதுக்கிய 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

image

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த மண்டபம் அருகே வேதாளையில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி மண்டபம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மண்டபம், பாம்பன் உச்சிப்புளி தனிப்பிரிவு காவலர்கள் பாரதி, கேசவன் கார்வண்ணன் ஆகியோர் வேதாளை தெற்கு தெரு ராஜா முஹமது வீட்டில் பதுக்கிய 450 கிலோ கடல் அட்டையை இன்று பறிமுதல் செய்தனர்.

News December 17, 2024

2 நாட்கள் காவிரி குடிநீர் விநியோகம் ரத்து 

image

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), புனரமைப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு III & V பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.19, 20 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News December 17, 2024

நடிகை கவுதமியிடம் மோசடி செய்தவர் கைது

image

நடிகை கவுதமியிடம் உதவியாளராக இருந்த பைனான்சியர் அழகப்பன், கவுதமிக்கு முதுகுளத்தூரில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.3.16 கோடி வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அழகப்பனின் உறவினர் சென்னை பூந்தமல்லி குமரப்பன் மகன் பாஸ்கர்(50) என்பவரை சென்னையில் நேற்று முன்தினம்(டிச.15) கைது செய்தனர்.

News December 17, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு 

image

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.12.2024 காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் சார்ந்த பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!