India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்த ரகுமத்நிஷா. இவரிடம் வண்டிக்காரத்தெருவில் பர்னிச்சர் கடை நடத்தும் கண்ணன் என்பவர் குலுக்கல் சீட்டு நடத்திகிறேன் என கூறியதை நம்பிய ரகுமத் நிஷா பணம் கட்டியுள்ளார். மேலும் 321 பேரை சேர்த்துள்ளார். சீட்டு பணம் ரூ.27 லட்சத்து 37 ஆயிரம் வரை கண்ணன் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து எஸ்.பி அலுவலகத்தில் ரகுமத் நிஷா புகார் அளிக்க, கண்ணனை நேற்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. *ஷேர்*
இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தான் ஜங்ஷன் அருகே நாளை(டிச.29) மாலை 4 மணிக்கு முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட, மாவட்ட துணை, தொகுதி, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி கருணாநிதி எம்பி நாளை இராமநாதபுரம் வருகை தருகிறார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ECR நான்குவழிச்சாலை பிரிவில் ஜன.04 அன்று காலை 6 மணிக்கு 13 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 15 கிமீ, மாணவிக்கு 10 கிமீ, 15,17 வயதிற்குட்பட்ட மாணவருக்கு 20 கிமீ, மாணவிக்கு 15கிமீ மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் Bonafied, ஆதார், வங்கி புத்தக நகல், மிதிவண்டி கொண்டு வர வேண்டும்.
இராமநாதபுரத்தில் கால்நடைகளை தாக்கும் கால்க்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்க்காணை மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 6 ஆவது சுற்று 03.01.2025 முதல் 31.01.2025 வரையிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை அவர்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம்(தமிழகம்) திரும்பியவர்கள் வங்கி உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களில் அடமானமாக வைத்த வீடு, பாஸ்போர்ட், நில ஆவணங்களை திருப்பி அவர்களுக்கே ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்: மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. வாகனங்களை டிச.28ஆம் தேதிக்குள் பாா்வையிட்டு, பதிவு செய்து கொள்ளலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளவா்கள் வாகனத்தைத் தோ்வு செய்து, முன்பணம் செலுத்த வேண்டும். பொது ஏலம் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில்(டிச.30) நடைபெறும். விவரங்களுக்கு அழைக்கவும் – 96777-32179, 83000-38162, 84389-39372
*ஷேர்*
இராமேஸ்வரம்-புவனேஸ்வர் அதிவிரைவு வண்டிக்கு ஜனவரி 2025 ஆம் ஆண்டின் அட்டவணையில் 30 நிமிடங்கள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 01/03/2025 முதல் (வண்டி எண்: 20895) இராமேஸ்வரம்-புவனேஸ்வர் அதிவிரைவு வண்டிக்கு 20896 என்ற எண்ணும், வண்டி எண்: 20896 புவனேஸ்வர்-இராமேஸ்வரம் அதிவிரைவு வண்டிக்கு 20895 எண்கள் மாற்றம் செய்யப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து 22 புண்ணிய தீர்த்தங்கள் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இன்று(டிச-26) நடிகர் யோகி பாபு ராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சியை கண்டித்து ராமநாதபுரம் போக்குவரத்து கழக பணி மனை முன் நாளை (டிச.27) காலை 9 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்க அதிமுக மாவட்ட செயலர் முனியசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.