Ramanathapuram

News February 1, 2025

சென்னை வந்த ராமேஸ்வரம் மீனவர்கள்

image

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர், விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டனர். அவர்களை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அனைவரையும் ராமேஸ்வரத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

News February 1, 2025

உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

image

மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (01.02.25) இரவு மண்டபம் வந்து தங்குகிறார். நாளை (02.02.25) காலை 10 மணி அளவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், கீழக்கரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின் கீழக்கரையில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.

News January 31, 2025

போக்குவரத்து புகைப்படங்கள் வெளியிட்ட தெற்கு ரயில்வே

image

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபத்திலிருந்து பாம்பனில் தெற்கு ரயில்வே சார்பில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் 2.08 கி.மீ தூரம் கடலில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடர்பான புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

News January 31, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பணி நாள்

image

ராமநாபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜன.13 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடுகட்டும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு நாளை (பிப்.1) பணி நாளாக கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் அறிவித்துள்ளார்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியான கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் & ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம். உடற்தகுதி, திறன், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு. பிப்.3ஆம் தேதிக்கு மேல் cisfrectt.cisf.gov.in ல் விண்ணப்பிக்கலாம். *ஷேர்

News January 31, 2025

கச்சத்தீவு செல்ல ரூ.2500 கட்டணம் நிர்ணயம்

image

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து படகுகள் மூலம் பக்தா்கள் செல்வது வழக்கம். வருகின்ற மாா்ச் 14, 15 ஆகிய தேதிகளில், 91 படகுகளில் ரூ.2,500க்கும் மேற்பட்ட பக்தா்கள் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பம் பிப்.6 முதல் 15ஆம் தேதி வரை வழங்கப்படும். பிப்.25க்குள் விண்ணப்பங்களை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். *ஷேர்*

News January 31, 2025

ராமேஸ்வரத்தில் இன்று ரயில் பெட்டிகள் பராமரிப்பு

image

பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை, திருப்பதி, கன்னியாகுமரி, கோவை, மதுரை, திருச்சி (ம) வெளி மாநிலங்களுக்கு மண்டபத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் திருப்பதி, குமரி ரயில் பெட்டிகள் ராமேஸ்வரத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு மீண்டும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெ.ரயில்வே அறிவிப்பு. *ஷேர்

News January 31, 2025

மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, சம்பவத்தன்று தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அக்காள் கணவர் ஆனந்த்(40), சிறுமியை பாலியல் வன்மை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தை கைது செய்தனர்.

News January 30, 2025

ராமநாதபுரத்தில் 3 காவலர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு

image

தமிழகத்தில் 83 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் ராமநாதபுரத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர்கள் குணசேகரன், சண்முகம், பாஸ்கரன் ஆகியோர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு சக காவலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News January 30, 2025

ரூ.5 லட்சம் மோசடி பணம் மீட்பு

image

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியை சேர்ந்த வேணுபாரதி(30) வீட்டில் இருந்த படியே அகர்பத்தி தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என யூடியூப்பில் விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு கொண்டு அகர்பத்தி இயந்திரம் வாங்க ரூ.5 லட்சம் செலுத்தியுள்ளார். அதற்குப்பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். போலீசார் 1 மாதத்திற்குள் பணத்தை மீட்டு வங்கி கணக்கில் வரவு வைத்தனர்.

error: Content is protected !!