Ramanathapuram

News July 22, 2024

ராமநாதபுரத்தில் பாலிதீன் கவர் பயன்பாடு அதிகரிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், கப், கவர்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக நீர்வரத்து வாய்க்கால்கள், காலி பிளாட்களில் பாலிதீன் பைகள் குவிந்துள்ளன. மண் வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News July 22, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

image

இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 பயனாளிக்கு ரூ.9350/- மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் 05 பயனாளிக்கு தலா ரூ.9637/- வீதம் மொத்தம் ரூ.48,185/- மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என மொத்தம் 06 பயனாளிக்கு ரூ.57,535/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். டிஆர்ஓ. கோவிந்தராஜுலு உடனிருந்தார்.

News July 22, 2024

செல்போன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

பரமக்குடி அருகே தனியார் வங்கி காவலாளியாக வேலை செய்து வந்தவர் ரஜினி. இவர் நேற்று மதுரையில் இருந்து பரமக்குடி சென்றபோது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து உயிரிழந்தார். இந்நிலையில், ரஜினி ‘POCO M5’ மாடல் போன் வைத்திருந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் அதனை வாங்கியுள்ளார். ஆதலால் செல்போன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News July 22, 2024

மீனவர் பிரச்னை குறித்து விவாதித்திடுக: நவாஸ்கனி MP

image

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று(ஜுலை 22) நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து கடிதம் அளித்தார். அதில், நாடாளுமன்ற மக்களவையின் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News July 22, 2024

ராம்நாடு கலெக்டராக பொறுப்பேற்ற சிம்ரன்ஜித் சிங்

image

ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மாறுதலாகி சென்ற நிலையில், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று(ஜூலை 22) காலை 87வது ராமநாதபுரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு பொறுப்புகளை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, அவருக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News July 22, 2024

36 அணிகள் பங்கேற்ற இறகுப்பந்து போட்டி

image

பரமக்குடியில் உள்ள ஆர்.எஸ். பேட்மிட்டன் அகாடமி சார்பில் இன்று(ஜூலை 22) மாபெரும் இறகுப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 20 – 25 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆர்.எஸ். அணி வெற்றி பெற்றுள்ளது. 36 அணிகள் பங்கேற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியினை ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்.

News July 21, 2024

செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு

image

ராமநாதபுரம், பரமக்குடியை சேர்ந்த ரஜினி என்ற இளைஞர் இன்று தனது நண்பருடன் மதுரையில் இருந்து பரமக்குடிக்கு வந்து கொண்டிருந்த பொழுது தெளிச்சாத்தநல்லூர் அருகே தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதில், தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். உடன் வந்த நண்பர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News July 21, 2024

ராமநாதபுரத்தில் ரூ.1 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

image

ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வங்கி கடன் உதவியுடன் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 21-40 வயக்குட்பட்டோர் வேளாண்மைத்துறையின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 23.7.24 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ராமநாதபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் கோட்ட மின் நுகர்வோர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என ராமநாதபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

News July 20, 2024

சிறையில் வேலை வாய்ப்பு

image

மதுரை மத்திய சிறையில் காலியாக உள்ள நெசவு ஆசிரியர், கொதி கலன் உதவியாளர், பரமக்குடி மகளிர் கிளை சிறயில் தூய்மை பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க 18 – 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் கல்வி, ஜதி, பிற சான்றிதல் நகலுடன் மத்திய சிறை சாலை, மதுரை 625016 என்ற முகவரிக்கு ஆக.16 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!