Ramanathapuram

News July 25, 2024

ராம்நாடு: பிரபல நடிகர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கியுள்ளார். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால், நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News July 24, 2024

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை ,சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து 3ஆம் தேதி இராமேஸ்வரத்திற்கும், 4ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

பரமக்குடியில் எம்.எல்.ஏ. பங்கேற்பு

image

பரமக்குடியில் வியாபாரிகள் சங்கத்தின் 51ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று ஆயிரவைசிய சபை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். வியாபாரி சங்கத் தலைவர் ராசி என்போஸ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வியாபாரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News July 24, 2024

நீரில் மூழ்கி சிறுவன் பலி

image

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவரின் மகன் ஜெயசாந்த் (7).  நேற்று மாலை அப்பகுதியில் உள்ள  கண்மாயில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜெயசாந்த் உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர.

News July 24, 2024

ராம்நாடு அருகே இலங்கைக்கு கடத்த முயற்சி 

image

மண்டபம் மரைன் போலீசார்
மண்டபம் வடக்கு கடற்கரையில் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இலங்கைக்கு கடத்த பதுக்கிய 180 கிலோ கடல் அட்டை, 650 கிலோ இஞ்சி, 400 கிலோ சமையல் மஞ்சள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடாஃபி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த பொருட்களை மண்டபம் சுங்கத்துறை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

News July 23, 2024

ராமேஸ்வரம் மீனவர் 9 பேருக்கு ஆக.6 வரை சிறை

image

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 497 விசைப்படகுகள் நேற்று காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று தொழிலுக்கு சென்றனர். இதில் 2 படகுகளைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இன்று அதிகாலை சிறை பிடித்தது. இந்த மீனவர் 9 பேருக்கும் ஆக 6 வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

News July 23, 2024

ராமநாதபுரம்:கல்லூரி சந்தையை திறந்த கலெக்டர்!

image

இராமநாதபுரம் மாவட்டம், கூட்டாம்புளி ஊராட்சியில் உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (23.07.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் கல்லூரி சந்தை (College Bazar) கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு கல்லூரி சந்தையை திறந்து வைத்து பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

News July 23, 2024

பரமக்குடி அருகே விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து பார்த்திபனூர் வழியாக இன்று(ஜூலை 23) வீரசோழனுக்கு சென்ற 6ம் எண் நகரப் பேருந்து கமுதக்குடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னாள் சென்ற‌ டிப்பர் லாரி மீது மோதியதில் பேருந்து உருகுலைந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 23, 2024

பட்ஜெட் 2024ல் ராம்நாட்டிற்கு கிடைப்பது என்ன?

image

3 ஆவது முறையாக ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு இன்று(ஜூலை 23) ‘மத்திய பட்ஜெட் 2024’ஐ தாக்கல் செய்யவுள்ளது. இதில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம் மற்றும் ராமநாதபுரம் வழியாக தொலைதூர ரயில்கள் இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ராம்நாடு மாவட்ட மக்களின் எதிபார்ப்பாக இருக்கும். இதேபோல் பட்ஜெட்டில் உங்கள் மாவட்டத்திற்கு வருபவை இடம் பெறுவது குறித்து உங்கள் கருத்து?

News July 23, 2024

313 ஆவது சந்தனக்கூடு கோலாகலம்

image

திருவாடனை தாலுகா பாசிப்பட்டினத்தில் பிரசித்திப்பெற்ற சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு 313 ஆவது சந்தனக்கூடு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேத்துடன் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை மத நல்லிணக்க சந்தன்கூடு விழா நடைபெற்றது. இதில், தாசில்தார், யூனியன் தலைவர் என அரசு அலுவலர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்று விழாவை கொண்டாடினர்.

error: Content is protected !!