India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உச்சிப்புளி பகுதியை சேர்ந்தவர் சசிகலா (27). இவர் பாண்டி (28) என்பவரை காதலித்துள்ளார். ஆனால் சசிகலா பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும் சேல்போனில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பாண்டியும் தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை திறந்து வைக்க நேற்று முந்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரமக்குடிக்கு வருகை தந்தார். அப்போது முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களை கழிவறையில் செல்போனில் வீடியோ எடுத்த பரமக்குடி நகர் சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) முத்துப்பாண்டியை பெண் காவலர்களின் புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு க்<

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இங்கு<

ராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க…

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள் :
1.ஏர்வாடி – 04576 263266
2.கமுதி – 04576 223207
3.மண்டபம் – 04573 241544
4.முதுகளத்தூர் – 04576 222210
5.பரமக்குடி – 04564 230290
6.ராஜசிங்கமங்கலம் – 04561 251399
7.ராமநாதபுரம் – 04567 230101
8.ராமேஸ்வரம் – 04573 221273
9.சாயல்குடி – 04576 4576
10.திருவாடானை – 04561 254399
அவசரகால பயனுள்ள தகவல் . SHARE பண்ணுங்க.

ராம்நாடு மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள், விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் <

தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவர் நேற்று முன்தினம் டூவீலரில் தேவிப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ராமநாதபுரம் அருகே வந்த போது திருப்புல்லாணியில் இருந்து வந்த கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆனந்தராஜின் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரனை.

இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் இதர வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சத்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம்.MLA ஆகியோர் இருந்தனர்.

இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் இதர வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சத்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம்.MLA ஆகியோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.