Ramanathapuram

News August 22, 2024

விநாயகர் சதூர்த்தி முன்னேற்பாடு ஆலோசனை

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், உதவி ஆட்சியர் முகமது இர்பான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News August 22, 2024

ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆக,22) மாதந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 84 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

News August 22, 2024

ராம்நாடு அருகே இலவச இருதய சிகிச்சை

image

இராமநாதபுரம் இராஜசூரியமடையில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில், ஆகஸ்ட் 31 காலை 8.30 மணி முதல் மாலை 5 வரை கொச்சி-கேரளா அமிர்தா வித்யாலய மருத்துவமனை நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட இருதய நோய் வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. *இதனை, உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்*

News August 22, 2024

நவராத்திரி விற்பனை கண்காட்சி: கலெக்டர் தகவல்

image

சென்னையில் செப். 21 முதல் அக்.6 வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சியில் பல்வேறு மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் இடம் பெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செப்.1 க்குள் https://exhibition.mathibazaar.com/login இணையத்தில் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 22, 2024

இராமநாதபுரம் காவல்துறை மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (ஆக,22) மாதாந்திர குற்ற தடுப்பு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 22, 2024

ஆர்.எஸ்.மங்கலத்தில் வேளாண் இடுபொருள் வழங்கிய கலெக்டர்

image

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் நேற்றும்(ஆக.,21), இன்றும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, விவசாய பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

News August 21, 2024

பரமக்குடியில் காவலர்கள் ஒன்று கூடும் விழா

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் 1997 ஆம் ஆண்டின் முதல் பேஜ் காவல்துறை நண்பர்களின் சங்கமம் கடல் புறா குழுவினரின் இரண்டாம் ஆண்டு காவலர்கள் ஒன்று கூடல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்.

News August 21, 2024

புதிய பாம்பன் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்

image

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் பதினோரு கூட்ஸ் பெட்டிகளைக் கொண்ட லோடு டெஸ்ட் எனும் சோதனை ஓட்டம் இன்று(ஆக.,21) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. புதிய ரயில்வே பாலம் தொடக்கம் முதல் சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை 20 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

News August 21, 2024

புதிய பாம்பன் பாலத்தில் இன்று சோதனை ஓட்டம்

image

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் பதினோரு கூட்ஸ் பெட்டிகளைக் கொண்ட லோடு டெஸ்ட் எனும் சோதனை ஓட்டம் இன்று(ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. புதிய ரயில்வே பாலம் தொடக்கம் முதல் சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை 20 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

News August 21, 2024

சார் பதிவாளர் மீது சொத்து குவிப்பு வழக்கு

image

ராமநாதபுரம் வெளிபட்டணம் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றிய பெத்துலட்சுமி லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் படி 19.10.23 இல் இடைத்தரகர்களிடம் ரூ.1,84,500 பெற்ற போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் பெத்துலட்சுமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய், ஆவணங்களை கைப்பற்றினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பெத்துலட்சுமி மீது இன்று மேலும் ஒரு வழக்கு பதிவவாகியுள்ளது.

error: Content is protected !!