India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழக்கரை அருகே பனையடி ஏந்தலைச் சேர்ந்த முனியசாமி மகன் ஜெயபால்(21). இவர் தனது டூவீலரில் இன்று காலை இதம்பாடல் அருகே சென்றார். அப்போது ஏர்வாடியை சேர்ந்த அப்துல் ஹலீம்(19), ( + 2 மாணவர்) சின்ன ஏர்வாடி ஷரீப் (19) உடன் டூவீலரில் வந்தார். 2 டூவீலரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயபால், அப்துல் ஹலீம் ஆகியோர் இறந்தனர். ஷரீப் காயமடைந்தார். இது குறித்து சிக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020-ம் ஆண்டு தப்பி வந்து தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா (34) கைதானார். திருச்சி முகாமில் தங்கி உள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நீதிபதி குமரகுரு வழக்கினை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் காலோன் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.,11 ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பரமக்குயில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 3,000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர். மேலும், பரமக்குடி நகர் முழுவதிலும் 26 இடங்களில் 76 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை (10.9.2024) கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும் அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும். கடல் அலை 2.3 முதல் 2.5 மீட்டர் உயரத்தில் எழக்கூடும். இதனால் மண்டபம் தென் கடல் பகுதி விசைப்படகுகள், நாட்டுப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என உதவி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் சிவக்குமார் இன்று(செப்.,9) தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெண்ணுக்கு வனத்துறை அலுவலர் பாலியல் தொல்லை எனப் புகார் எழுந்துள்ளது. புகாரையடுத்து அந்தப் பெண் தனது உறவினர்களுடன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளார். அப்போது அந்த வனத்துறை அலுவலர் செந்தில்குமார்
அலுவலகத்தை பூட்டிக்கொண்டு உள்ளேயே பதுங்கி கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் புகார் அளித்த பெண் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் சார்பில் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் 5-16 வயது சிறுவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைப்பயிற்சி அளிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் வரும் செப்.,14 தேதி நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 9842567308 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜீத காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்: திருப்புல்லாணி வாஹித் கிரிக்கெட் அகாடமி, நண்பர்கள் உதவிக்கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாமானது, இந்திய மாற்று திறனாளிகள் கிரிக்கெட் போர்டு துணை தலைவரும், தமிழக மாற்று திறனாளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் ரமேஷ்கண்ணன் மேற்பார்வையில், நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வீரர்கள் 20 பேர் தேர்வாகினர்.
பரமக்குடியில் செப்.,11 இமானுவேல் சேகரன் நினைவு அனுசரிக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்கும்மாறும், திமுக இரு வண்ண கொடிகளை கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ராமேஸ்வரம், பாம்பன், தேவிப்பட்டினம் ஆகிய சுற்றுலா இடங்களை கடல் வழியாக கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் 3 மணிநேர கப்பல் போக்குவரத்து சேவை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கப்பல் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் இன்று(செப்.,8) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.