India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி முதல் இதுவரை குழந்தை திருமணம் தொடர்பாக 72 தொலைபேசி புகார்கள் வந்ததில் 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 15 திருமணங்கள் நடந்து முடிந்த பின்னர் தகவல் கிடைத்ததால் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக 8 குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழா பரமக்குடியில் இன்று(செப்.11) நடைபெற்று வருகிறது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (செ,11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள இன்று பரமக்குடிக்கு வருகை தந்த தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இம்மானுவேல் சேகரனார் குருபூஜை விழாவிற்கு இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பரமக்குடிக்கு வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குருபூஜைக்கு வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராமநாடு காவல்துறை மிகவும் அலட்சியமாக செயல்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியாது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் 9 பேர் உயிர் தப்பினர். இதில் படையப்பா என்பவரின் 2 கால்களும் முறிந்த நிலையில் ஒரு கால் அகற்றப்பட்டது. மீதமுள்ள 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.. இது குறித்து பரமக்குடி போலீசார் விசாரக்கின்றனர்.
இம்மானுவேல் சேகரனாரின் 67-வது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில், பரமக்குடி வட்டாரத்தில் உள்ள 84 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பரமக்குடியில் இன்று(செப்.10) தியாகி இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தருவர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, ராமநாதபுரத்தில் இருந்து வரும் பேருந்துகள் நயினார் கோவில், இளையான்குடி, சிவகங்கை, மேலூர் வழியாக பரமக்குடிக்குள் வராமல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா பருவத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா-5100 மெ.டன், டி.ஏ.பி-1495 மெ.டன், பொட்டாஷ்-109 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2206 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் 97 மெ.டன் என 9007 மெ.டன் உரங்கள் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் நாளை(செப்.10) தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவுதினத்தை முன்னிட்டு தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா பரமக்குடி நகர் முழுவதும் கண்காணிக்க டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தார். தொடர்ந்து நாளை இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாளை (செப்.11) கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும் அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசம் மற்றும் கடல் அலை 2.1 முதல் 2.4 மீட்டர் உயரத்தில் எழக்கூடும். இதனால் மண்டபம் வடக்கு கடல் பகுதி விசைப்படகுகள், நாட்டுப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என உதவி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் சிவக்குமார் இன்று (செப்.10) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.