Pudukkottai

News August 10, 2024

புதுக்கோட்டை எக்ஸ் எம்பி அறிவிப்பு

image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று புதுக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அன்பழகன் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், எக்ஸ் எம்பியுமான திருநாவுக்கரசர் கலந்து கொள்ள இருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் பங்கேற்கவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News August 10, 2024

புதுக்கோட்டையில் நாளை கனமழை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 11ஆம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வங்க கடலில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை வீச கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு “மஞ்சள் அலர்ட்” விடப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

புதுக்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது

image

புதுக்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஜெயபிரகாஷ் மணிகண்டன், சுரேஷ் பாண்டியன், மகாதேவன், பாண்டியன் ஆகிய 5 பேர் போலீசார் நடத்திய சோதனையில் பிடிபட்டனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவரும் கடலூர், திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. இவர்கள் யாராயினும் கொலை செய்ய திட்டமிட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News August 10, 2024

சாலை விபத்தில் 2 பேர் பலி; இருவர் படுகாயம்

image

புதுக்குடி அருகே நேற்று இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் படுகாயமடைந்த இரண்டு நபர்களை அருகிலுருந்தவர்கள் மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இறந்து போன இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

புதுகையில் கலந்தாய்வுக் கூட்டம்

image

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் தலைமையில், இன்று ஆட்சியரகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தொழிற்சங்கப் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 9, 2024

கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் பொ.செந்தில்வடிவு, முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் பலர் கலந்து கொண்டனர். 

News August 9, 2024

புதுக்கோட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (10.08.2024) சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் 19.08.2024 திங்கட்கிழமை அன்று நடைபெறும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு தொடர்பான கூட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

புதுகையில் இறந்தும் வாழ வைத்த பெண்

image

வடவாளம் அடுத்த செட்டியாபட்டி சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் சமயபுரம் நடைபயணம் மேற்கொண்ட போது விபத்தில் காயமடைந்து, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்நிலையில் இன்று அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு சென்னை, மதுரை, தஞ்சாவூர் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். இந்த செயல் புதுக்கோட்டை மக்களின் மத்தியில் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேர் செய்யவும்

News August 9, 2024

புதுகையின் முன்னாள் அமைச்சர் வாழ்த்து

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்ற நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் சென்ற முறை நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ்சோப்ரா இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், அனைத்து வருவாய் வட்டங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகள், நியாயவிலை கடை தொடர்பான குறைகளை நிறைவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!