Pudukkottai

News September 4, 2024

புதுகை ஆட்சியர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (04.09.2024) கொடியசைத்துத் துவக்கி வைத்து, குடிநீர் பரிசோதனைக் கருவியின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார்.

News September 4, 2024

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது

image

புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடல்பகுதியில் வைத்து கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாண மீன்வளத் துறையிடம் நாளை காலை ஒப்படைக்க உள்ளனர்.

News September 4, 2024

அறந்தாங்கி வழியாக இயங்கும் ரயில் மூன்று மாதங்கள் நீட்டிப்பு

image

அறந்தாங்கி வழியாக இயங்கி கொண்டிருக்கும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலை (12.09.2024 முதல் 28.11.2024) மூன்று மாதங்கள் நீட்டித்தும், மறுமார்கத்தில் வண்டி எண்:06069 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் (13.09.2024 முதல் 29.11.2024) மூன்று மாதங்கள் நீட்டித்தும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 4, 2024

அரசமலையில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் அரச மலைப் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரசமலையில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாடுகளை கண்டு அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து காரையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 4, 2024

புதுக்கோட்டையில் பாதுகாப்பு கருதி சீல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணுவாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சி தலைவர் அருணா இன்று ஆய்வு செய்து, இயந்திரங்கள் பாதுகாப்பு கருதி சீல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் நகர பொறுப்பாளர் இப்ராஹிம் பாபு அரசு அதிகாரிகள், மாற்றுக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

News September 4, 2024

மாநில அளவிலான போட்டியில் புதுகை மாணவி வெற்றி

image

ஈரோட்டில் 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான சப் ஜூனியர் மாணவ மாணவியர்கள் இரட்டையர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் புதுக்கோட்டை பள்ளி மாணவி திவ்யா வெற்றி பெற்றார். மேலும் மாணவிக்கு பள்ளி தாளாளர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

News September 4, 2024

அரசமலையில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் அரச மலைப் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அரசமலையில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மாடுகளை கண்டு அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து காரையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 4, 2024

புதுக்கோட்டையில் 5 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது

image

புதுக்கோட்டை ஒன்றியம் மேலப்பட்டி மகேஸ்வரன் (அறிவியல்), புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளி யுனைசிகிரிஸ்டி ஜோதி (தமிழ்), அன்னவாசல் நிலையபட்டி ஆசிரியர் கலைவாணி, அசோக் நகர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பழனிச்சாமி (அறிவியல்), திருமயம், காட்டுபாவா பள்ளிவாசல் பள்ளி வசந்த மலர் (ஆங்கிலம்) 5 பேருக்கும், 2024ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது என தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

News September 4, 2024

கல்லூரி மாணவி மாயம்

image

குளத்தூர் அருகே டி. கீழையூர் பகுதியை சேர்ந்தவர் நல்லையா. இவரது மகள் பாண்டிச்செல்வி புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறியவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் தந்தை புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News September 4, 2024

விராலிமலையில் கஞ்சா விற்ற இருவர் கைது

image

விராலிமலை சக்தி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, ராம்ஜீநகரை சேர்ந்த வினோத் குமார், கரண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 1.150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் கஞ்சா, மோட்டார் சைக்கிள், செல்போன், ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!