India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க!

புதுக்கோட்டை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.!

புதுக்கோட்டை, போலீசில் நடைமுறையில் இருந்த ஆர்டர்லி ஒழிப்பதற்கான மாவட்ட அளவிலான குழு அமைக்க ஆணையிட்ட பட்டத்தின் அடிப்படையில், கலெக்டர் செயல்முறை ஆணைப்படி மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு ஆணை இடப்பட்டுள்ளது. இதில் ஆர்டர்லி முறை குறித்து கலெக்டர் நேர்முக உதவியாளர் 9445008146 என்ற எண்ணிலோ, அல்லது mailto:pag.pdk@tn.gov.in மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

புதுகை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நாளை (14. 03.2026) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, ரேஷன் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டை நகல் கோருதல், கைபேசி எண் மாற்றம், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு வகையான, கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்படலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

இலுப்பூர் விளாபட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் லோகேஸ்வரன், இவர் நேற்று இலுப்பூர்-பாக்குடி சாலையில் ஜீவாநகர் பிரிவு சாலை என்னுமிடத்தில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் லோகேஸ்வரன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசராணை செய்தனர்.

கிளிக்குடியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் பாரதிராஜா (45), இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊளையூர்- கிளிக்குடி சாலையில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் பாரதிராஜா ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதிராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.