India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுகையில் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தனியார் மஹாலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் சிவ.வி. மெய்யநாதன் மற்றும் திருமயம் தொகுதி வேட்பாளர் S. ரகுபதி பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில்,‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை கோல்டன் நகரை சேர்ந்தவர் முகமது அபுதாகிர்(54). இவர் அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பச் சண்டை காரணமாக கோல்டன் நகரில் உள்ள வீட்டில் கடந்த 6 மாதமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மீது ஏற்பட்ட மன கசப்பு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துஜ் அவரது மகன் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கந்தர்வக்கோட்டை – தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் புதிய ஆரோக்கிய மாதா கோவில் எதிரே பைல்க்கில் வந்த இருவர், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதனையெடுத்து அடுத்து காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்துக்குள்ளானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.02) இரவு 10 முதல் இன்று (ஏப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <

புதுக்கோட்டை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.