Pudukkottai

News January 24, 2025

ஜகபர் அலி கொலை; விசாரணை அதிகாரி நியமனம்

image

புதுக்கோட்டை, திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி சட்டவிரோத கனிம கொள்ளைக்கு எதிராக போராடியதால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஜன.22 அன்று சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை அதிகாரியாக புவனேஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று குவாரி உரிமையாளர் ராமையா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

News January 24, 2025

2ஆவது குரு ஸ்தலத்தை பற்றிய சிறப்பு பார்வை

image

ஆலங்குடி, சுந்தரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தமிழகத்தில் 2ஆவது குரு ஸ்தலமாக நாமபுரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. அங்கு வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வாரந்தோறும் வியாழக்கிழமை தொடர்ந்து 9 முறை தங்கள் ஜாதகத்தை வைத்து பூஜித்து கோயில் உள்பிரகாரத்தில் 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால், ஜாதக ரீதியான தோஷங்கள், திருமண தடைகள், பண கஷ்டம் நீங்குவதாகக் கூறப்படுகிறது. SHARE NOW!

News January 24, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 24.01.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 24.01.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

News January 23, 2025

இளைஞர்களுக்கு உதவித்தொகை  ஆட்சியர் அறிவிப்பு 

image

மாவட்டத்தில் படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் தகுதியான நபர்கள் உதவித்தொகை பெறலாம் எனவும் இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுகள் எந்தவித தேக்க நிலையும் இருக்காது எனவும் இந்த உதவித்தொகை வருடம் முழுவதும் வழங்கப்படுவதாகவும் தகுதியானவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 23, 2025

விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மு.அமைச்சர்

image

புலிப்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற ஒரு பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து பிலிப்பட்டிக்கு சென்றுகொண்டறிந்தார். அப்போது தனது இருசக்கர வாகனத்தில் புடவை சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மு. அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை கண்டதும் 108 ஆம்புலன்ஸ் அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

News January 23, 2025

குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

News January 23, 2025

மாணவிகளுக்கு கையேடு வழங்கிய அமைச்சர்

image

புதுக்கோட்டை மாவட்டம் புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு., 10 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மெல்லக்கற்கும் மாணாக்கர்களுக்கு தேர்வில் எளிதில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், எளிமையாக புரிந்து கொண்டு பயிலும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கையேட்டினை மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

News January 23, 2025

புதுகை நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (ஜன.24) காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க உள்ளனர். அதேபோல் புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவும், விவசாய மானிய திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜன.24) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

திருமயம் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

image

திருமயம் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுகை எஸ்.பி அபிஷேக்குமார் பரிந்துரையின் பேரில் டிஜிபி சங்கர் ஜிவால் மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருமயம் அருகே கனிமவள கொள்கைக்கு எதிராக போராடியவர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!