Pudukkottai

News September 2, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 5,738 பேர் பயன்

image

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் 4 மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 5,738 பேர் பயனடைந்துள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் கர்ப்பப்பை, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகை நோய்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News September 2, 2025

புதுகை: கம்மி விலையில் வீடு வேண்டுமா ?

image

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதுகை மாவட்டத்தில் சுமார் 1287 வீடுகளை அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News September 2, 2025

புதுகை: போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2-ம் நிலை காவலர், சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் நகல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பநகல் ஆகியவற்றுடன் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அணுகலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

News September 2, 2025

புதுக்கோட்டை: சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட அறிவிப்பில், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய தொழில் முனைவோருக்கு மாநில அளவில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளதாக கூறினார். இதற்கான தகுதி வாய்ந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், விருதுகள் சுற்றுலா மேம்பாட்டில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

News September 2, 2025

சித்த மருத்துவ ஆயுஷ் பிரிவில்‌ சேர விண்ணப்பிக்கலாம்

image

புதுகை மாவட்ட சித்தா மருத்துவ ஆயுஷ் பிரிவில் சித்த மருத்துவ ஆலோசகர், ஹோமியோபதி மருத்துவ அலுவலர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://pudukkottai.nic.in இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட சித்தா அலுவலரிடம் வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

புதுகை இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (01.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News September 1, 2025

புதுகை: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

image

புதுகை மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி புதுகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!

News September 1, 2025

புதுகை: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

image

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!

News September 1, 2025

புதுக்கோட்டை: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், புதுகை மாவட்ட மக்கள் ‘9486111912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News September 1, 2025

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற புதுகை மாணவன்

image

திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாணவன் கிஷோர் தங்கப்பதக்கம் வென்று
மாநிலப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது பயிற்சியாளர் அப்துல் காதருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!