India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாவூரணியைச் சேர்ந்தவர் வீ.தர்மராஜ்(55). கொத்தனாரான இவர் நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின்பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விவசாய வேலைக்கு சென்று வீடு திரும்பிய அவரது மனைவி பானுமதி அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தகவலறிந்து வந்த கறம்பக்குடி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை சில 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞருக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2025 தேதி தகுதியேற்றப்படும் நாளாக கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன. இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள 1561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆதிதிராவிடர் நலவிடுதி காப்பாளர் நாகூர்முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஆய்வுக்கு செல்லும்போது காப்பாளர் நாகூர் முத்து பணியில் இல்லாததால் அவரை பணியிடம் நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்யும் முகாம் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள நாட்களில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளை கழக பொறுப்பாளர்கள் பொறுப்புடன் பணியாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி புதுக்கோட்டை, சித்தன்னவாசல், திருமயம், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
கந்தர்வகோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மன்னார்குடிக்கு ஜல்லிகற்கள் ஏற்றி சென்ற லாரி பழுதாகி நின்றது. அப்போது திருச்செந்தூரிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராவிதமாக லாரியில் மோதியது. இதில் லாரியின் கிளீனர் ஜீவா(25) அதே இடத்தில் பலியானார். பஸ்சில் காயமடைந்த பயணிகள் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலிஸார் விசாரிக்கின்றனர்.
திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளர் வெங்கடேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பணியிலிருந்த வட்டாரக் கணக்கு உதவியாளர் வருண் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் இருந்து கூடுதல் இயக்குனர் 2 நாட்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளர் வெங்கடேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பணியிலிருந்த வட்டாரக் கணக்கு உதவியாளர் வருண் நிரந்தரமாக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் இருந்து கூடுதல் இயக்குனர் 2 நாட்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.