Pudukkottai

News November 21, 2024

மதுபோதையில் கல்லால் அடித்து ஒருவர் உயிரிழப்பு

image

இலுப்பூர், கூவாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலிவேலை செய்துவரும் இவர் அப்பகுதி இடுகாட்டில் நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அரளை கல்லால் தாக்கப்பட்டதில் கனகராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 21, 2024

மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு மாடுகள் பலி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி பூனையின் தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 20, 2024

இலுப்பூரில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.11.2024) நடைபெற்ற அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

News November 19, 2024

தண்டலை ஊராட்சியில் ஆட்சியர் ஆய்வு 

image

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரினை, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 19, 2024

அறந்தாங்கி : புதிய பள்ளி கட்டிடம் ஆய்வு செய்த அமைச்சர்

image

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாளூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 206.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 7 வகுப்பறையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 19, 2024

கீரமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு

image

ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கீரமங்கலம் பேரூராட்சி மேலக்காடு முஸ்லிம் ஜமாத்தார்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் தனியாக தொழுகை நடத்துவதற்கு ஏதுவாக செட் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியக்குழு மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News November 19, 2024

புதுக்கோட்டையில் மருத்துவர்கள் போராட்டத்தின் எதிரொலி

image

கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவின் மூலம் காவலர்கள், நோயாளிகளையும், பொதுமக்களையும் சோதனை செய்த பின்னர் அனுமதித்து வருகின்றனர். இது மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

News November 18, 2024

புதுகையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம்தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

image

புதுகை மாவட்டத்தில் உள்ள 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் மு.அருணா தெரிவித்தார். நேற்று திருமயம் வட்டம் மணவாளன்கரை கிராமத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News November 18, 2024

 புதுகையில் 12,889 பேர் விண்ணப்பம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் 2 நாட்காளக நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இரண்டு நாட்களில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,889 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

error: Content is protected !!