India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு அக் & நவ ஆகிய 2 மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசிக்கு ஈடாக ரூ.1,200, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ இலவச அரிசிக்கு ஈடாக ரூ.600 வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 5 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை இன்று (21-1-25) துணை நிலை ஆளுனர் கைலாஷ் நாதன், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர். இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.
புதுச்சேரி கோவிந்த சாலை வாஞ்சிநாதன் வீதியில் கண்டாக்டர் தோட்டம் லோகபிரகாஷ், அவரது கூட்டாளிகள் ஹேமந்த், குபேர் நகர் விஜயராகவன் மற்றும் சிறார்கள் மூவர் நாட்டு வெடிகுண்டு வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதில் ஹேமந்த், விஜயராகவன் மற்றும் 3 சிறார்களை பெரியக்கடை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிழக்கு போக்குவரத்து எஸ்.பி.செல்வம் தலைமையில் நடந்த வாகன சோதனையில், பைக் ஓட்டி வந்த 15 சிறார்கள், சிவாஜி சிலை அருகில் நடத்திய சோதனையில், 4 சிறார்கள் சிக்கினர்.இவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைக்கப்பட்டனர். தண்டனை, அபராதம் தொடர்பான சட்ட விதிகள் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சிறார்கள் வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பெற்றோர்களை கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியப்பெருமாள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கருவடிக் குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி நாளை புதன்கிழமை தொடங்கி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுவை இணையவழி சீனியர் எஸ்.பி. நாரா சைத்தன்யா நேற்று சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது உங்கள் நம்பிக்கை கூறியவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும் அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சொந்த தொழில் வருமானம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற விபரம் வெளியாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் தகவலின் படி புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டது. இந்தியாவின் 28 மாநிலம், 8 யூனியன் பிரதேசத்தில் புதுவை 24 ஆவது இடத்தில் உள்ளது. இதில் 160 பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.
புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம், பல்கலைக்கழக மாணவியிடம் அத்துமீறல் குறித்து முழு விசாரணை நடத்தி உரியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றார்.
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 2025 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று, வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 9.30 மணிமுதல் 1.00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது 5 தற்குறிப்பு மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாவற்குளம் வார்டில் ரூபாய் 10.67 கோடி செலவில் சாலை அமைப்பதற்கான பணி இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.