Pondicherry

News January 24, 2025

அபராதம் விதிக்கும் e-challon கருவி

image

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து எஸ்பிக்கள் சுப்ரமணியன், பாலச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில்காவல் நிலைய அதிகாரிகளுக்கு e-Chellan கருவிகளை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சௌஜன்யா வழங்கினார் வழங்கினார்.

News January 24, 2025

1,664 அரசு ஆசிரியர்களுக்கு கைக்கணினி – புதுச்சேரி முதல்வர்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி கல்வித் துறை மூலம் பள்ளிகளில் வகுப்பறைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,664 அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (TABLET) வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்

News January 24, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநா் கைது

image

புதுவை சேதராப்பட் 13 வயது சிறுமி, சில நாள் முன்பு பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின் வீடு திரும்பினாா். அவரிடம் பெற்றோா் விசாரித்தில் வேலூா் மாவட்டம், சின்னமோட்டூர் காா்த்தியுடன் வாட்ஸ் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இந்நிலையில், சிறுமியை ஏழுமலை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பின்னர், சேதராப்பட்டு போலீசார் ஏழுமலையை போக்சோவில் கைது செய்தனா்.

News January 24, 2025

பாகூரில் 26 இல் கிராம சபா கூட்டம் – ஆணையர் அழைப்பு

image

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்களில், 5 கட்டங்களாக கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புபாளையம், காட்டுக்குப்பம், குருவிநத்தம், மணமேடு, மூர்த்திக்குப்பம், பனித்திட்டு பரிக்கல்பட்டு, ஆகிய இடங்களில் நடைபெறும்

News January 24, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி இணையவழி சீனியர் எஸ்பி நாரா சைத்தானியா நேற்று  கோரிமேட்டில் செய்தியாளர்களிடம் உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம் என்றும், கடன் வாங்கிய அனைத்து நபர்களுமே அவர்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி, அந்த புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி, பல மடங்கு அதிகமாக பணத்தை பறித்துள்ளனர், ஆகவே உடனடி கடன் செயலில் கடன் வாங்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

News January 23, 2025

நிர்வாண படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

image

செல்போன் செயலின் மூலம் கடனை கொடுத்துவிட்டு, கொடுத்த தொகைக்கு மேல் பல மடங்கு பணத்தை கடன் வாங்கியவரின் படத்தை நிர்வாணமாக மாற்றி அனுப்பி மிரட்டி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முகமது ஷபி (32) என்பவர் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.

News January 23, 2025

மொபைல் பழுது நீக்கம் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பாக, பயிற்சி அளிக்கும் இந்நிறுவனத்தில், மொபைல் போன், பழுது நீக்குதல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் (24ம் தேதி) ஆகும். பயிற்சி 27ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர, 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். SHARE NOW

News January 23, 2025

காரைக்கால் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

image

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடத்தும் இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் “இயற்கை விவசாயம்” குறித்த பயிற்சி 10.02.2025 முதல் 15.02.2025 வரை ஆகிய 6 நாட்களிலும் நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 07.02.2025 அன்றுக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 23, 2025

புதுவை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய துணை இயக்குநர் ஷ்வேதா விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆடவருக்கான கோ-கோ, கபடி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு புதுச்சேரி இலாசுப்பேட்டை பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற தோ்வுகள் நடைபெறவுள்ளன 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் சேர்க்கைகான விண்ணப்பம் தேர்வு நாளன்று வழங்கப்படும்.

News January 23, 2025

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களுக்கு தீர்வு

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் புகார்களுக்கு தீர்வு காண, மாவட்ட உள்ளூர் புகார் குழுவின் தலைவரை 8825425745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 0413-2299500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!