Pondicherry

News March 22, 2024

ஆயுதங்களுடன் 7 பேர் கைது

image

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதன், கௌதம், சரண், பிரேம்குமார், லோகேஷ், கார்த்திக் உட்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 21, 2024

இந்தியா கூட்டணி மாவட்ட ஆட்சியர் சந்தித்து புகார் மனு

image

காரைக்காலில் இன்று இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏ நாஜிம், காங்கிரஸ் முன்னால் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிடோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணியில் ஆளுங்கட்சியினருக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக புகார் மனு அளித்தனர்.

News March 21, 2024

பிரதமர் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை

image

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரியில் ரெஸ்டோபார்வை திறந்து விட்டு கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் அவருடைய சாதனை என்று விமர்சனம் செய்தார்.

News March 21, 2024

புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை வகித்தார்.

News March 21, 2024

மார்ச் 25ஆம் தேதி ஓபிடி இயங்காது – ஜிப்மர்

image

புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் விடுமுறை தினமான 25ஆம் தேதி திங்கட்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (ஓபிடி ) இயங்காது. எனவே அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

News March 21, 2024

புதுச்சேரி : அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதி

image

புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் புதுவை சட்டப்பேரவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேரவைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டபேரவை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

News March 21, 2024

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் இவர் தான்

image

புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை

image

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று(21.3.24) முதல் (23.3.24) வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

News March 21, 2024

புதுவை: 90 பேர் மீது வழக்கு பதிவு

image

புதுவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் 90 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது இடத்தில் கலவரம் மற்றும் அமைதியை குலைக்கும் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய காவல் துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்ற வழக்கு உள்ளவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 107 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து வருகின்றனர்.

News March 20, 2024

கடலோர காவல்படை மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுவை கடலோர காவல்படை போலீசார் இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் இன்று கடலுக்கு சென்று மீன் பிடித்த மீனவர்களிடம் உரிமம் உள்ளதா?, மது, பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என சோதனை நடத்தினர். மேலும், கடலில் புது நபர்கள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். படகுகளில் மதுபானம், பரிசு, பணம் கடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். 

error: Content is protected !!