India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி
வேட்பாளர் தமிழ்வேந்தன் மாநில அதிமுக கழக செயலாளர் அன்பழகன் Ex-M.L.A.
முன்னிலையில் வேட்புமனு தாக்கல் இன்று செய்தார்.அப்போது
மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர்,
உழவர்கரை நகர கழக செயலாளர் சித்தானந்தம் மற்றும் முன்னாள் தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் உடன் இருந்தனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மின்னணு ஊடகங்கள், திரையரங்குகள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விளம்பரங்கள், காணொலிக் காட்சிகளை தேர்தல் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், எத்தனை மாணவர்கள் மற்றும் எத்தனை தேர்வு மையங்கள் என்பது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று வெளியிட்டார். இதில், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில், மொத்தம் 2,479 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் சித்தாந்த கோவில் மற்றும் அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி பெற்றார். பின் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோந்துங்கனிடம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 49 மையங்களில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வில் 7685 மாணவர்கள் 7408 மாணவியர் என 15093 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி நாளை 26 ஆம் தேதி மொழிப்பாட தேர்வுடன் தொங்கும் இத்தேர்வுகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. இத்தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருவது வழக்கம். ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் மாதா கோவில் வீதி உள்ள ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட தலைமை துணை தேர்தல் சான்றளிப்பு குழுக்களிடம் அனுமதி பெறாத விளம்பரங்களை தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வெளியிட வேண்டாம். சான்றிதழ் பெறாத விளம்பரங்கள், காணொலிக் காட்சிகளை வெளியிடுவது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறும் செயலாகும். எனவே, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜவஹா் கூறினார்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுவை பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் நாளை(25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் (ம) தொண்டர்கள் கருவடிக்குப்பம் சித்தானந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆதரவாளர்கள் உடன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.