India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் மின்துறை இயக்குதல் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ்சன்யால் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் பணிகளால் இன்று மற்றும் நாளை மின்துறையில் உள்ள அனைத்து கணினி வசூல் மையங்களும் இயங்காது. எனவே, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை சம்பந்தப்பட்ட மின்துறை இணையத்தில் செலுத்தும்படி” தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி காலை 6 மணி வரை சட்டவிரோதமான கூட்டம், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதும் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுவதும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் இந்திய தண்டனை சட்டம் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காரைக்காலில் வாக்காளர்களுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் பணம் தருவதாகவும் இதனால் உடனடியாக புதுவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி, தவளக்குப்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் வினோதினி. இவர் கடந்த 4 ஆண்டுகளாக குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் வினோதினி தேசிய அளவில் 64-ஆவது இடத்தையும் புதுச்சேரியில் முதல் இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை சந்திரன் புதுச்சேரி காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு புதுச்சேரியில் இன்று (ஏப்.17) மாலை 6 மணி முதல் 1 ஏப்.20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும் மதுபான கடைகளுக்கும் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.
புதுச்சேரி தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் தொகுதி முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
புதுவை கவர்னரின் செயலராக ஐ.ஏ. எஸ். அதிகாரி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை கவர்னரின் செயலராக இருந்த அபிஜித் சவுத்ரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரசின் கலை பண்பாட்டு செயலர் நெடுஞ்செழியன் கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கவர்னரின் செயலர் பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாணிக்கதீபன் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்பட்டுள்ளார்.
லாஸ்பேட்டை அவ்வை நகரில் நேற்று வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து, இரண்டு வீடுகளில் வாக்காளர்களை சந்தித்து, தனது தனிப்பட்ட தேர்தல் திருவிழா அழைப்பினை வழங்கி, தவறாமல் வாக்களிக்குமாறும் மற்றவர்களையும் வாக்களித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி நகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீரர் ஜெயந்தி ஏப்.21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு ஆடு, மாடு, பன்றி, மீன்கடைகள் போன்ற அனைத்தும் அங்காடிகள் அன்று மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறி இறைச்சி மீன்கடைகள் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினரான மோகன்தாஸின் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று வருமான வரி துறையினர் சோதனை நடத்தி நடத்தினர். அந்த அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கம் வீட்டில் சோதனை செய்த அதே அதிகாரிகள் இங்கும் சோதனை என என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.