India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “புதுவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நிலைய மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக டிக்கெட் கவுண்டர்களின் இடங்கள் ஜன.08 முதல் மாற்றப்படுகிறது. கவுசிக பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள புதிய கட்டடத்தில் முன்பதிவு கவுண்டர் செயல்படும். முன்பதிவு இல்லாத டிக்கெட் கவுண்டர் பாண்லே பால் பூத்துக்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (PRTC) ஊழியர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள நிலுவைத் தொகை மற்றும் முறையான ஊதியம் வழங்கக் கோரி இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்படாததால், பணிக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றியவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேருக்கு, சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் 26 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பதவி உயர்வு பெற்ற 27 ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல அடிப்படையில் தேர்வுச் செய்யப்படும் 125 மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கும். இதற்கு <

புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல அடிப்படையில் தேர்வுச் செய்யப்படும் 125 மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கும். இதற்கு <

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரியில் நடந்த போலி மருந்து வழக்கில், சிபிசிஐடி போலீசார் கைது செய்த 24 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தியதாகக் கூறப்படும் உரிமையாளர் மதுரை ராஜா, ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்பட மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் ராஜாவின் கூட்டாளிகள் ராணா மற்றும் மெய்யப்பன் ஏற்கனவே ஜாமீன் பெற்றிருந்தனர்.

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது<

புதுவையில் பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச துணிக்கு பதிலாக தலா ரூ.1,000 வழங்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதன்படி 1,45,930 அட்டைகளுக்கு ரூ.1,000 நேரடி பண பரிவர்த்தனை மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று (ஜன.8) முதல் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.