India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

புதுச்சேரி பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
1.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி-1070
2.பிராந்திய ஆணையர் மற்றும் துணை ஆட்சியர் வடக்கு-1077
3.அவசர ஊர்தி (Ambulance)-102, 108
4.தீயணைப்பு-101
5.காவல் கட்டுப்பாட்டு அறை-100
6.குழந்தைகள் பாதுகாப்பு-1098
7.பெண்கள் உதவி-1091
8.சாலை விபத்துகள்-1073
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

திருக்கனூர் அடுத்த வாதானூர் மின்துறை அலுவலகம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, தலைமை காவலர் துரைக்கண்ணு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, கஞ்சா விற்பனை செய்த ரவுடிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து, 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

புதுவையிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயில் நேரம் ஜன.19 முதல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி புதுவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் தினமும் பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படுகிறது. இனி இது பிற்பகல் 2:40-க்கு புறப்படும். வில்லியனூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில் 2:59 முதல் 3 மணி வரை நின்று செல்லும். ஆனால் இனி இந்த ரயில் அங்கு 2:49 முதல் 2:50 வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மேலும் சீனியர் எஸ்.பி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தனியார் கொரியர் நிறுவனங்கள் மூலம் பார்சல் எடுத்து வரும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வருகின்றனவா என்பது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோரை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சூழலில், செல்வகுமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி தனது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து (16.1.2026) அன்று காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தர இருந்த சிறப்பு மருத்துவர்களின் வருகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் (23.01.2026) வெள்ளிக்கிழமை அன்றைக்கு மாற்றப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.