Pondicherry

News April 25, 2024

புதுச்சேரியில் நீட் மாதிரி நுழைவு தேர்வு

image

புதுச்சேரியில் தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது. இந்த தேர்வு ஏப்.28 ஆம் தேதி காலை 10: 00 மணி முதல் மதியம் 1: 20 மணி வரை, புதுச்சேரி புது பஸ்ஸ்டாண்ட் மங்கலட்சுமி பின்புறம் உள்ள ஆல்பா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது. தினமலர் மாதிரி நீட் நுழைவு தேர்வில் பங்கேற்க 78714 79674 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் முன்பதிவு செய்யவும்.

News April 25, 2024

புதுவை: அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி

image

முத்தியால்பேட்டையை சேர்ந்த ஹேமசந்திரன் என்பவர் டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார். இந்நிலையில்,  நேற்று அறுவை சிகிச்சையின் போது அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News April 25, 2024

காரைக்காலில் ஆட்சியர் ஆய்வு

image

காரைக்காலில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அரையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மணிகண்டன் அந்த மையத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சிடிவி கேமராவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 25, 2024

ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

காரைக்கால் ரயில் நிலைய 2-ஆவது தண்டவாளப் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய கண்காணிப்பாளர் நகர காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

image

புதுச்சேரி அரசுப்பணியாளர்களுக்கு ஓய்வுதியம், பணிக்கொடை (கிராஜுவிட்டி ), வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடகவும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.

News April 25, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்

image

புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கோதண்டராம சுவாமிக்கு ராம நவமி உற்சவம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வாக வரும் 30 ஆம் தேதி தெப்ப உற்சவமும், 1 ஆம் தேதி முத்து பல்லாக்கு வீதியுலாவும், 2 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

News April 24, 2024

புதுச்சேரி: மர்மமான முறையில் சினிமா துறை சார்ந்தவர் மரணம்

image

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் சினிமா ஆடை வடிவமைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புதுச்சேரி படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை மர்மமான முறையில் இருந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

பால்குட ஊர்வலத்தில் வாலிபர் கொலை

image

புதுச்சேரி பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி பால் கூட ஊர்வலத்தில் அதே பகுதியைச் சார்ந்த உத்ரேஸ்(28) என்ற வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

News April 24, 2024

புதுவை துணை செயலாளருக்கு முன்னாள் முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி மாநிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரின் வீட்டில் இன்று சந்தித்து‌ பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் ஆசி பெற்றார்.

News April 24, 2024

புதுவை படகு குழாமில் பனானா ரைடர் வெள்ளோட்டம்

image

புதுவையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகு வாங்கப்பட்டு அது இயக்கப்படாமல் இருந்தது. மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம் எனக் கூறினர்.

error: Content is protected !!