India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் எல்லை பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக வாகன சோதனை செய்தனர். இதே போல் பல்வேறு சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சகத்தின் கீழ் நேரு யுவகேந்திரா மற்றும் புதுச்சேரி ஜிஎஸ்டி ஆணையம் இணைந்து புதுச்சேரியில் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தும் “எனது பாரதம் – தூய்மை பாரதம்” என்கின்ற தலைப்பில் துப்புரவு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா மாநில இயக்குனர் மற்றும் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுவையில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.சி.பி.எஸ்.இ.வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி.பாடபுத்தகம் வாங்கப்பட்டது.
புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் இந்திராநகர் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார். திலாசுப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கிருந்து திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி இன்று உப்பளம் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
சின்ன மணிக்கூண்டு அருகே பிரச்சாரத்தில் ரங்கசாமி உரையாற்றிய போது அவரிடம் முதியோர் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குமாறு 75 வயதான மூதாட்டி ஒருவர் கண்கலங்கி பேசி கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, “அரசு சரியான நேரத்தில் முதியோர் பென்சனை உயர்த்தும்” என முதல்வர் கூறினார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த சுவிங்லின் என்பவர் காரைக்காலில் உள்ள வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு சென்று ஏ.டி.எம் பின் செட் பண்ண தெரியாதவர்களிடம் உதவி செய்வது போல் நாடகமாடி அவர்களின் ஏ.டி.எம் கார்டை மறைத்து வைத்துக்கொண்டு பழைய ஏ.டி.எம் கார்டை கொடுத்து ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இதனை அடுத்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இந்தியா கூட்டணி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து நேற்று காரைக்காலில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும், மின்துறை தனியார்மயமாக்கப்படாது, ரேஷன் கடைகள் திறக்கப்படும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் இன்று மதியம் பிரச்சாரம் செய்தார். அப்போது வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து மற்ற நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். 15 நிமிடம் ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.