India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியில் நடந்த விபத்து தொடர்பான வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரமின்றி பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போலீசார் பதிவு செய்த வழக்கு தற்போது சிபிசிஐடி கையில் எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சிபிசிஐடி விசாரணையில் புதிய ஆதாரங்கள் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்: 1.உப்பளம், அனிபால் கென்னடி – 9488483330, 2.அரியாங்குப்பம், பாஸ்கர் – 9443468258, 3.காமராஜ் நகர், ஜான் குமார் – 9655680961, 4.காரைக்கால் தெற்கு, நாஜிம் – 9585400500, 5.காரைக்கால் வடக்கு, திருமுருகன் – 9344488811, 6.நெடுங்காடு, சந்திர பிரியங்கா – 9443629191. இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்!

தென்கிழக்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜன.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்குள்ள மூலவர் கைலாசநாதர், தாயார் செளந்தாராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டு மீண்டும் பிரெஞ்ச் ஆட்சி காலத்திலும் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் செய்யவும்.!

புதுச்சேரி மாநிலத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தொகை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பயனாளிகளின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். மேலும் இதற்கான கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் முழுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

புதுவை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரி செவிலியர் நலசங்கம் சார்பில், செவிலியர் பதவி உயர்வு & அரசு மருத்துவ மனைகளில் உள்ள காலி நிரப்ப பணியிடங்களை கோரி சங்கத் தலைவர் சாந்தி, அனுராதா, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் திலகா, நிர்வாகிகள் காந்திமதி, ராசாயி, சுமதி, கவிதா, கவுரவ செயலாளர் ஜானகி ஆகியோர் சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி வெளியிட்டுள்ள செய்தியில், அரசின் செயல்பாடுகள், குறைபாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் காங்கிரஸ் சாா்பில், வரும் 21-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை புதுச்சேரிக்கான நடைப்பயணம் நடத்தப்பட உள்ளது. இதில் அகில இந்திய மற்றும் பல்வேறு மாநிலத் தலைவா்களும் பங்கேற்க உள்ளனா். வரும் 21 ஆம் தேதி முத்தியால்பேட்டையில் தொடங்கப்படும் என்றார்.

NCERT தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 176
3. வயது: குறைந்தது 27 – அதிகபட்சம் 50
4. சம்பளம்: ரூ..19,900 – ரூ.78,800
5. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
6. கடைசி தேதி: 16.01.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.