India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை, நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்த சார்லஸ்(45) கூலி தொழிலாளி மனைவி மேரி. மது பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்தது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை, நெல்லித்தோப்பு பெரியார்நகரை சேர்ந்த சார்லஸ்(45) கூலி தொழிலாளி மனைவி மேரி. மது பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்தது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில், நாளை ஜன.14 போகி பண்டிகை முன்னிட்டு, புதுச்சேரி அரசின் சார்பில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜன.31 அன்று சனிக்கிழமையாக இருந்தபோதிலும், அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. போகி பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாட புதுச்சேரி அரசு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

பீகார் மாநில ‘ட்ரிடஸ் ரெமிடீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ என்ற மருந்திற்குத் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த சிரப்பில் சிறுநீரகத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய, எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சுப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால், தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

புதுவையில், கடந்த 06.12.2025 அன்று கூனிச்சம்பட்டு – மணலிபட்டு சாலையில் ஏற்பட்ட மோதலில், கூனிச்சம்பட்டு காலனியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் போது இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ, புகைப்படம், ஒலி பதிவு அல்லது வேறு ஏதேனும் பதிவுகள் யாரிடமாவது இருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் -1077, குழந்தைகள் உதவி எண் -1098, பெண்கள் உதவி எண் – 1091, குற்றங்களை தடுப்பவர் – 1090, மீட்பு மற்றும் நிவாரண ஆணையர் -1070, சாலை விபத்து – 1073, அவசர ஊர்தி – 102,108, தீயணைப்பு – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியபடுத்தவும்.

டேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் 39-வது தேசிய சப்-ஜூனியர் டேக்வாண்டோ போட்டிகள் இன்றிலிருந்து 3 நாட்கள் புதுதில்லியில் நடைபெறுகிறது. புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தலைமைப் பயிற்சியாளர் பகவத்சிங், பயிற்சியாளர்கள் மிஸ்ரா, தேவானந்த் மற்றும் நடுவர் ஹரிஹரன் உடன் செல்கின்றனர்.

புதுவை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.