India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை கவர்னரின் செயலராக ஐ.ஏ. எஸ். அதிகாரி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை கவர்னரின் செயலராக இருந்த அபிஜித் சவுத்ரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரசின் கலை பண்பாட்டு செயலர் நெடுஞ்செழியன் கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கவர்னரின் செயலர் பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாணிக்கதீபன் அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்பட்டுள்ளார்.
லாஸ்பேட்டை அவ்வை நகரில் நேற்று வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து, இரண்டு வீடுகளில் வாக்காளர்களை சந்தித்து, தனது தனிப்பட்ட தேர்தல் திருவிழா அழைப்பினை வழங்கி, தவறாமல் வாக்களிக்குமாறும் மற்றவர்களையும் வாக்களித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி நகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீரர் ஜெயந்தி ஏப்.21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு ஆடு, மாடு, பன்றி, மீன்கடைகள் போன்ற அனைத்தும் அங்காடிகள் அன்று மூடப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை மீறி இறைச்சி மீன்கடைகள் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியின் உறவினரான மோகன்தாஸின் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று வருமான வரி துறையினர் சோதனை நடத்தி நடத்தினர். அந்த அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி பாராளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கம் வீட்டில் சோதனை செய்த அதே அதிகாரிகள் இங்கும் சோதனை என என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை: முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் யோகா வகுப்பு நாளை 17-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432-77486, 94432-75040 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புதுவை, கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிா்வேல் (53). இவா் மத்திய அரசு நிறுவனத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளாா். இவர் வீட்டில் மடிக்கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மேஜையில் வைத்து விட்டு வெளியே சென்றபோது மா்மநபா்கள் கதிா்வேலின் வீட்டின் உள்ளே புகுந்து மடிக்கணினி, ஆவணங்கள் என ரூ.4 லட்சம் மதிப்புள்ளவற்றைத் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தோ்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்ட செய்தியில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கவும், விற்பதற்கும் வழங்கப்பட்ட உரிமங்கள் வரும் ஏப்ரல்.17-ஆம் தேதி முதல் ஏப்ரல்.20-ஆம் தேதி வரையிலும், ஜூன் 2-ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலும் தற்காலிமாக தடை செய்யப்படுகிறது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கரை திரும்பி தங்களது படகுகளை மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை அடுத்து புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகள் பழுது பார்க்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
சர்வதேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே உள்ள பாரதி பூங்காவில் திருநங்கைகள் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினர். திருநங்கைகள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி கீழ் புத்துப்பட்டு பகுதியில் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த பேருந்தும் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரும் நேருக்கு இன்று காலை நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், காரில் சென்ற இரண்டு பேர் மற்றும் ரோட்டில் நடந்து சென்ற இருவர் என 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கீழ் புத்துப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.