Pondicherry

News January 30, 2026

புதுச்சேரியில் தொடங்கிய மலர் கண்காட்சி

image

புதுச்சேரி வேளாண்மை தரை சார்பில் 35ம் ஆண்டு மலர், காய், கனி கண்காட்சி இன்று மாலை துவங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது. இந்தாண்டு கண்காட்சியில் புதிய ரகமாக இம் பேஷன், கைலாடியா, பையர்பால் ஆகியவை உள்பட 25 வகை மலர் செடிவகைகளில், 40,000 மலர்செடிகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக மலர் கண்காட்சியில் ‘ஆர்கானிக்’ வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.

News January 30, 2026

புதுச்சேரி: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் APP-<<>>ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 30, 2026

புதுச்சேரி: மனைவியின் பிரிவால் கணவன் தற்கொலை

image

புதுச்சேரி, பாகூரைச் சேர்ந்த கொத்தனார் பாண்டியன் (40), மதுப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்தார். இவர் தனது தாயார் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறை உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

புதுவை: காவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

image

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர் (போலீஸ் கான்ஸ்டபிள் ) பதவிக்கான எழுத்துத் தேர்வு, வரும் (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உள்ள ஐந்து மையங்களில் நடைபெற இருக்கின்றன. இத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டை தேர்வர்கள் https:// recruirtement .py.gov.in என்னும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News January 30, 2026

புதுச்சேரி: பாஜக தேர்தல் படிவம் இன்று வெளியீடு

image

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில தலைவா் வி. பி. ராமலிங்கம் நேற்று செய்தியாளா்களிடம் கூறும்பொழுது, சட்டப்பேரவைத் தோ்தல்-2026 ஐ எதிா்கொள்ளும் வகையில் பாஜக சாா்பில் மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கடற்கரை காந்தி திடல் அருகே இன்று வெளியிடுகிறாா் என்றார்.

News January 29, 2026

புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

image

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 29, 2026

முத்திரையர்பாளையம்: ஆயிகுளம் மேம்பாட்டுப் பணிக்கு பூமி பூஜை

image

இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையத்தில் சுமார் 3.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிகுளம் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். மேலும், புதிதாக பெரிய வாய்க்கால் அமைக்கும் பணி ரூ.1.76 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொகுதி ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 29, 2026

புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. SHARE பண்ணுங்க!

News January 29, 2026

புதுச்சேரி: ரவுடி அப்பு படுகொலை

image

புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில், அப்பு என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியை அடித்து நொறுக்கிய வழக்கில் அப்பு கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர், தற்போது மர்ம கும்பலால் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!