India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

புதுச்சேரி அரசு, சமூக நலத்துறை இயக்குனர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி அரசு, சமூகநலத்துறை மாற்றுத்திறனாளிகள் மனமகிழ்விற்காக ஆண்டுதோறும் இலவச சுற்றுலா செல்லும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான நான்கு நாட்கள் இலவச சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வை, காது மற்றும் உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

புதுவை ஒதியஞ்சாலை உதவிஆய்வாளர் ஆனந்தகுமார்
மற்றும் போலீசார் ரோந்து
பணியில் இருந்தனர்,
அப்போது மறைமலையடிகள்
சாலை, மற்றும் கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை
மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை
பிடித்து விசாரித்ததில்
முகேஷ் (23) என்பது
தெரியவந்தது. இதனையடுத்து
போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

புதவை சேதராப்பட்டு – குரும்பாபேட் மின் பாதையில் இன்று (பிப்.12) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர் ஒரு பகுதி, EVR தெரு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று (பிப்.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (68). இவர் கந்துவட்டியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கடனளித்தவர்கள், சித்ரா வீட்டில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறாா். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் பேரவையில் அவா் ஒப்புதல் கோருகிறாா்.
Sorry, no posts matched your criteria.