India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த, 148 காவலர் பணியிடங்களுக்கான (ஆண்கள் – 100, பெண்கள் – 48) எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்விற்கான முடிவுகள் recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமான சான்றிதழ் சரிபார்ப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி, துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லாரி உரிமையாளர் விஜயகாந்த் என்பவரது வீட்டில், ரூ.10 லட்சம் மதிப்பிலான ஏழரை பவுன் நகை மற்றும் 80,000 ரூபாய் பணம் திருடு போனது. வீட்டின் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்திலிருந்து எடுத்த மர்ம நபர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெரிய வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பெரிய வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர் சட்டத்திருத்தத்தை கண்டித்து, நாடு முழுவதும் பிப்.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு புதுச்சேரி இந்தியா கூட்டணி முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் அன்று புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் டெம்போக்கள் இயங்காது என இந்தியா கூட்டணியின் சார்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பிப்.12 முதல் 15-ஆம் தேதி வரை நான்கு இடங்களில் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதற்கான லோகோவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். மேலும் புதுச்சேரி அரசு சார்பில் சிறந்த திரைப்பட இயக்குநர்களுக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 8 மொழிகளில் உருவாக்கப்பட்ட 45 சிறந்த திரைப்படங்கள் திரையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

புதுச்சேரி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.