India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரான்சில் வசித்து வரும் எழில்ராஜன்-கனிமொழி தம்பதியினர், புதுச்சேரியில் தங்களது நிலத்தை ரூ.19 லட்சத்திற்கு விற்றனர். அந்த பணத்தை கனிமொழியின் தாய் மற்றும் சகோதரன் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் பணத்தை திருப்பிக் கேட்டபோது, சகோதரன் மிரட்டியதாக கனிமொழி புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், தவளக்குப்பம் போலீசார் சகோதரன் இளவரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி தலைமை செயலகத்திலுள்ள தேர்வு அமைப்பின் சார்பு செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மொத்தம் 25 பணியிடங்களுக்கு 1 கேலரி அசிஸ்டெண்ட் மற்றும் 24 இளநிலை நூலக உதவியாளர், வரும் ஏப்ரல் 26-ம் தேதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை ஏப்ரல் 11-ம் தேதி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.” என கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் புதுச்சேரி தட்டாஞ்சாவடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில், முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ச. கார்த்திக் குமாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அழகு கலை வல்லுநரான அவர், நாம் தமிழர் கட்சி சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆட்சியில் திமுகவுக்கு பங்கு இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தங்களது தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமையும் என்று திமுக தொடர்ந்து கூறி வரும் நிலையில், காங்கிரஸின் இந்த அறிவிப்பு இரு கட்சிகளிடையே அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி சமூக முன்னேற்றத்தில், மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கமாகும். இந்த மகளிர் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலத்துடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், சமூகத்தில் சமத்துவமும் சமவாய்ப்பும் பெற்று, அனைத்துத் துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என்றார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில், பெண்களுக்கு தரப்படும் கல்வி, சட்டபூர்வமான உரிமைகள், சமத்துவ வாய்ப்புகள், சமுதாய பாதுகாப்பு அனைத்தும் வளமான சமுதாயத்தை கட்டமைப்பதற்கான ஒரு முதலீடு. அதுவே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பதால் அதை உறுதிப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. பெண்களின் சாதனைகளை கொண்டாட வாழ்த்துக்கள் என்றார்.

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.