India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அதன்படி, புதுவை -2336238, கோரிமேடு -2272913, வில்லியனூா்- 2668101, திருக்கனூா்- 2688101, மடுகரை- 2699101, பாகூா்- 2633101, காலாப்பட்டு- 2655873, திருபுவனை- 2641101 சேதராப்பட்டு- 2678101 ஆகிய தீயணைப்பு நிலையங்கள் தீபாவளி நாளில் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என தீயணைப்பு கோட்ட அதிகாரி இளங்கோவன் தெரிவித்தார்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் காலாவதி மாதம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள மருந்துகள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காலாவத தேதி நெருங்குவதற்கு முன்பே அத்தகைய மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும், மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் மருந்துகளை சுகாதாரத்துறை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க வைத்துள்ளார்.
புதுவை மாநிலத் தோ்தல் அதிகாரி ஜவஹா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுவை ஒன்றிய ஆட்சிப் பரப்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் 2025-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை, திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக். 29) வெளியிடப்படுகிறது.இதையடுத்து வாக்காளா்களின் கோரிக்கைகள் மனுவாக வரும் நவம்பா் 24-ஆம் தேதி வரையில் அளிக்கலாம்” என்றார்.
புதுச்சேரியில் லொகாண்டோ இணைய வழி மூலம் 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலை புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீசார் இன்று இரவு பொள்ளாச்சியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், வில்லியனூரை அடுத்த ஆரியபாளையம், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பொதுப்பபணித்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் முன்னிலையில் ஆளுநர் கைலாஷ்நாதன் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியை கடைப்பிடிக்காத நிறுவங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆன்லைன் போர்ட்டலில் நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் இருப்பினும் புதுச்சேரியில் 22 நிறுவனங்கள் போர்ட்டலில் பதிவு செய்யவில்லை அந்த நிறுவனங்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்குமாறு புதுச்சேரி மின்துறைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய்க்கு இளம் வயது. அவர் நினைத்திருந்தால் இன்னும் பல படங்களில் நடித்து பல கோடிகளை சம்பளமாக பெற்றிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். இது பாராட்டுக்குரியது. மாநாட்டில் இளைஞர்களின் எழுச்சியை பார்க்க முடிந்தது. இதை மனதார பாராட்டுகிறேன். அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் (தொழில்முறை கல்லூரிகள் உட்பட) உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அக்டோபர் 30, 2024 புதன்கிழமை விடுமுறை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். 16 நவம்பர், 2024 (சனிக்கிழமை) மேற்கூறிய விடுப்புக்குப் பதிலாக ஈடு செய்யப்படுகிறது.
காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து ரெஸ்டோ பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் தீபாவளிக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து 10 கிலோ அரிசி இரண்டு கிலோ சர்க்கரை இதுவரை வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்
புதுச்சேரியில் 115 பேருக்கு பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட் டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறை அனுமதி மற்றும் கடை அமையும் இடத்தின் பாதுகாப்பு அம்சம் இட ஆவணங்கள் அடிப்படையிலும் 115 பேருக்கு மட்டுமே பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிமம் பெறாமல் பட்டாசுக் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.