India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதனுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.புதுச்சேரி ஆளும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு மெஜாரிட்டி இழந்துள்ளது ஆறு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுவதால் முதலமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்
முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கூறியதாவது, புதுச்சேரியில் அரசு தொடர்ந்து கலாச்சார சீரழிவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நடன நிகழ்ச்சியில் மது போதையில் நடனம் ஆடக்கூடிய ஒரு கேவலத்தை புதுச்சேரி மண்ணில் அரங்கேற்றியுள்ளதால், மீண்டும் அரசு கடற்கரை சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்துவதற்கு ஆளுநர் தடை செய்ய வேண்டும். இது சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த பூமி என்றார்.
அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது கனரக வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி இணைய வழி எஸ்.பி. பாஸ்கரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த வருட மட்டும் ரூ.40 கோடி அளவிற்கு இணைய வழி மோசடியில் புதுச்சேரி சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையவழியில் வரும் வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருளை கொடுக்கிறோம். ஆன்லைன் டிரேடிங்கில் அதிகமாக சம்பாதிக்கலாம், வீட்டில் இருந்தபடியே வேலை வாய்ப்பு போன்ற எதையும் நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றார்.
புதுவை ஜிப்மர் எதிரே வணிக வளாகத்தில் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த சிவசங்கர் எம்எல்ஏவை, ரவுடி ராமு மிரட்டியதை அடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார் ரவுடி ராமுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரின் பரிந்துரையை ஏற்று, ராமுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். உத்தரவு நகலை காலாப்பட்டு சிறை அதிகாரிகளிடம் கோரிமேடு போலீசார் நேற்று வழங்கினர்.
புதுவை மாநில சட்ட பணிகள் ஆணைய உறுப்பினர் அம்பிகா வெளியிட்ட அறிக்கையில் புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின்படி நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது புதுவை காரைக்கால் ஏனாம் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாக வழக்குகள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது வக்கீல்கள் மூலம் விண்ணப்பித்து தீர்வு பெறலாம் என அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை திருவிழாவையொட்டி இன்று மாலையில் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வழிபட்டார். மேலும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் கார்த்திகை தீப விழா இன்று விமர்சையாக நடந்தது.கோவில் கோபுரத்தில் தீபம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் திரளான பக்தர்கள் ஒரு லட்சம் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இதே போல் காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கார்த்திகை தீப திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகள், அலுவலகங்கள், கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவர். தொடர்ந்த 3 நாட்கள் நடைபெறும் இந்த தீப விழாவில் தீபம் ஏற்றுவதற்கான விளக்குகள் புதுச்சேரி கொசக்கடை தெருவில் இன்று விற்பனை ஜோராக நடந்தது பல வண்ணங்களில் சுடு மண் விளக்குகள் டெரகோட்டா அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
புதுச்சேரி பேருந்து நிலையம் சில தினங்களில் துவக்க விழா காண இருப்பதால் இன்று போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் PRTC மேலாண் இயக்குனர் சிவக்குமார் பேருந்து நிலையத்தை இன்று ஆய்வு செய்தார். ரவிச்சந்திரன், CTO, கந்தசாமி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்து பொதுமக்கள் நலனுக்காக சில மாற்றங்களை உடனடியாக செய்து தறுமாறு ஆலோசனை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.