Perambalur

News December 21, 2024

பெரம்பலூர் அருகே 4 கோவில்களில் திருட்டு

image

பெரம்பலூா் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயில், கருமாரியம்மன் கோயில், புதுவேலூா் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள அவினாசி அம்மன் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களின் பூட்டை உடைத்து, மொத்தம் ரூ. 1.20 லட்சம் பணம், 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது நேற்று தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News December 20, 2024

பெரம்பலூர்: மாவட்ட எஸ்பி காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இன்று (20.12.2024) -ம் தேதி பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்டும், பதிவேடுகளை சரிபார்த்தும் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாடாலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு காவலர் பணிகளை மேம்படுத்தும் சில அறிகுறிகளை வழங்கினார்.

News December 19, 2024

2,000 கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு

image

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில், ஹெல்ப்லைன் என்னான 1950 என்ற வடிவில் 2,000 கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று இளம் வாக்காளர் சேர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

News December 19, 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கு ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கினை, காலாண்டு ஆய்வுக்காக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News December 19, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர், கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (டிச.20) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 19, 2024

வரலாறுகள் கொண்ட வாலீஸ்வரர் கோவில்

image

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் ஆட்சி காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன. கோவிலில் உள்ள ஒரு குளம் 1761ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் கட்டப்பட்டுள்ளது. இது மன்னர்கள் நீராடுவதற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. SHARE செய்யவும்.

News December 18, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 32 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுவைப் பெற்றார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 32 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

மழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மீண்டும் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 12.12.2024 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரையாண்டு ஆங்கில தேர்வு தொடர் கன மழையால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு ஆங்கிலத் தேர்வு வருகின்ற 21.12.2024ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என பெரம்பலூர் மாவட்ட (CEO) முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 18, 2024

பெரம்பலூரில் கடைகள் மற்றும் கோவிலில் திருட்டு

image

பெரம்பலூா் நகரில் உள்ள 2 கடைகளில் மா்ம நபா்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும், 3 கடைகளில் திருட்டு முயற்சி நடைபெற்றதும் செவ்வாய்க்கிழமை நேற்று தெரியவந்தது. அதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள கல்லுடையான் கோவிலில் உள்ள உண்டியலில் ரூ.500 திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவங்கள் குறித்து பெரம்பலூர் போலீசார் நிகழ்விடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 18, 2024

பெரம்பலூர்:குடிநீர் கோரி சாலை மறியல்

image

பெரம்பலூா் ‎அருகேயுள்ள ‎மேலப்புலியூா் ‎கிராமத்திலுள்ள ‎பழைய ‎காலனி ‎வீதியில் ‎சுமாா் ‎100- ‎க்கும் ‎மேற்பட்ட ‎குடும்பங்கள் ‎வசித்து ‎வருகின்றன.இந்நிலையி ல் அப்பகுதி குழாயில் ஏற்பட்ட ‎பழுது ‎காரணமாக சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மாலை தண்ணீர் குழாயை சீரமைத்து தர கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!