Perambalur

News January 9, 2026

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 8, 2026

பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

image

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 8, 2026

பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ<> இணையதளத்தில் <<>>புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

பெரம்பலூர்: ஆட்சியர் தொடங்கி வைத்த சுற்றுலா

image

பெரம்பலூர் மாவட்ட இயற்கை மற்றும் காலநிலை மாற்றம் சார்பாக இரண்டு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை இன்று (08-01-2026) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பசுமைத் தோழர் ஜாகிர்ஹுசைன், செல்வக்குமார், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஏற்பாடு செய்தனர். 50 மாணவ-மாணவிகள், 10 ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர்.

News January 8, 2026

பெரம்பலூர்: இனி வங்கி செல்லவேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 8, 2026

பெரம்பலூர்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

பெரம்பலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

பெரம்பலூர் கைவினை கலைஞர்களுக்குக் கடன் உதவி

image

பெரம்பலூர் ஆட்சியர் கூட்ட அரங்கில், கைவினை கலைஞர்களுக்குக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 16 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான உத்தரவுக் கடிதம் அளித்த ஆட்சியர் ந.மிருணாளினி, “கைவினை கலைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கில் கடந்த 6.12.2024 முதல் கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என கூறினார்.

News January 8, 2026

பெரம்பலூர்: பொங்கல் பரிசு குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், ஆட்சியராக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000, வேட்டி, சேலைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் இன்று (ஜன.8) முதல் 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

News January 8, 2026

பெரம்பலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.8) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!