India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 மற்றும் 299255 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று(மார்ச் 26) தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களைக்கட்டியுள்ள நிலையில், பெரம்பலூர் பாஜக வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இந்நிலையில், ரூ.126 கோடி என் சொந்த நிதியில் இருந்து தொகுதிக்காக செலவு செய்துள்ளதாக கூறிய பாரிவேந்தர், மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்தால் 1200 மாணவர்களை எஸ்ஆர்மில் இலவசமாக படிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5 % உள் ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வேண்டி அனைத்து கட்சியினருக்கும் மனுவாக அளித்தனர். எந்த கட்சியும் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என்று பெரம்பலூர் மாவட்ட மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 26) 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 43 மையங்களில், 144 பள்ளிகளை சேர்ந்த 4,375 மாணவர்களும், 3,626 மாணவிகளும் என மொத்தம் 8,001 பேர் தேர்வு எழுத உள்ளனர், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எந்தவித பதட்டமும் அச்சமும் இன்றி தேர்வை எழுத வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுரை வழங்கியுள்ளார்.
வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற இருக்கும் மக்களவை பொது தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்கவும் மற்றும் உதவிகள் பெறவும் விளம்பர நோட்டீசை வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பிரேமராணி இன்று பொதுமக்களிடம் வழங்கினர்.
மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா முன்னிட்டு கடந்த 16ம் தேதி மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் மார்ச் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, பெரம்பலூரில் இரா. தேன்மொழி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.