India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 91.16% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 87.59சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.54 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 92.89% பேரும், மாணவியர் 96.75% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.82% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 6வது இடத்தை பிடித்துள்ளது.
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று காலை 10- மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் அதிக மகசூல் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர், களத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவானது இன்று மே.13-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பாசிலா 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3ம் இடமும், அரசுப் பள்ளிகளில் முதலிடமும் பெற்று சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று(மே 12) தலைமை ஆசிரியர் செல்வராசு உள்ளிட்டோர் மாணவியை வாழ்த்தினர்.
கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம், தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உலக செவிலியர் தினம் மற்றும் உலக அன்னையர் தினம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைசெல்வன் பங்கேற்று அசத்தி விழா குழுவினரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.