India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கின் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும், வடலூர் ராமலிங்கர் நினைவு நாளினை முன்னிட்டு வரும் பிப்.1-ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என, ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <

பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
தாலுகா – 4
1. பெரம்பலூர்
2. வேப்பந்தட்டை
3. குன்னம்
4. ஆலத்தூர்
சட்டமன்ற தொகுதிகள் – 2
1. பெரம்பலூர் (தனி)
2. குன்னம்
நகராட்சி – 1
1. பெரம்பலூர்
பேரூராட்சிகள் – 4
1. அரும்பாவூர்
2. குரும்பலூர்
3. இலப்பைக்குடிகாடு
4. பூலாம்பாடி
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா? உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.

முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில், கொடிநாள் நிதி திரட்டுவதில் பெரம்பலூர் மாவட்டம் மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்தது. இதனை தொடர்ந்து சென்னை ராஜ்பவனில் நேற்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தப்பி ஓட முயன்றதால், கொட்டு ராஜா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், வெள்ளை காளியை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்து முன்னாள் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், காரில் பயணித்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தமுத்து (50) மற்றும் ஹரிஹரன் (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.