India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் கலைஞர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்தில் 192 கண்காணிப்பு கேமராக்களுடன் மத்திய துணை ராணுவம் துப்பாக்கி ஏந்திய நிலையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்,(ஜூன்4) நாளை கூடுதலாக 1125 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு என்னும் மையத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களை நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி தெரிவித்துள்ளார்.
கடலூர், கோழியூரை சேர்ந்த 5 பேர் காரில் திருச்சி சென்று விட்டு மீண்டும் நேற்று சொந்த ஊர் சென்றுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் சென்ற போது, கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, ஒரு டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டூவீலரில் வந்தவர் உயிரிழந்தார். காரில் வந்த 3 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள IOB வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் கிராமம் (ம) நகர்ப்புற இளைஞர்களுக்கு கண்காணிப்பு கேமரா பழுது நீக்கல் பயிற்சி ஜூன் 6ஆம் தேதி முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சேர விரும்பும் 19 -45 வயதுடைய ஆண்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை, கல்விச் சான்றுடன் ஜூன்.3 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம் என பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி தனியார் பள்ளி சார்பில் தாளாளர் சின்னசாமி ரேணுகாதேவி முன்னிலையில் இன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவுக்கு மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுத்திறனாளி வீரர் எஸ்.கலைச்செல்வன் கலந்துகொண்டு 3ஆம் இடம் பிடித்து விழா குழுவினரிடம் சான்றிதழ் பெற்றார்.
2023-24ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் குன்னம் வட்டம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருது பெற்ற பள்ளிகளுக்கு நேற்று முதன்மை கல்வி அலுவலர் (கூபொ) பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை ரொக்க பரிசு விருதுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூரில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், எளம்பலூர் சாலை, நான்கு ரோடு, துறைமங்கலம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் (ம) பாதாள சாக்கடை குழாய் இணைப்புகளும் (ம) குழாய்களின் பழுது சீரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளை நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் செய்து கட்டணம் செலுத்தி நகராட்சி பணியாளர்கள் மூலம் பணிகளை செய்து கொள்ள வேண்டும். வெளி ஆட்களை கொண்டு தன்னிச்சையாக செயல்படுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (ம) சென்னை பாவை பவுண்டேஷன் சார்பில் பெரம்பலூர் வட்டார வள மையத்துக்குட்பட்ட பெரம்பலூர் கிழக்கு ஊ.ஒ.தொ. பள்ளியில் செயல்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி மே.20 முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பயிற்சியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கிப்ட் பாக்ஸ் (ம) பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.