India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு, மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கான இவ்விருதிற்கு விண்ணபிக்க தேவையான விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையத்தில் பார்க்குமாறு ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்
மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாநிலங்களில் நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சாதனை படைத்தவர்களை பாராட்டும் வகையில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கான இவ்விருதிற்கு விண்ணபிக்க தேவையான விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையத்தில் பார்க்குமாறு ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காற்றுடன் பெய்த கன மழையினால் நொச்சியம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் அளவிலான நெற்கதிர்கள் சாய்ந்து முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமணன், செயல் அலுவலர் அசனாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த, வேப்பந்தட்டை தாலுகா பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் செளந்தரசீலன் என்பவரை எதிரே வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி, பூபதி (வயது-53) என்பது போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஆலத்தூர், பாடாலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் அய்யனார் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா விழா தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன், அய்யனார் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மே-22ம் தேதியான இன்று பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருடைய வயலில் கட்டப்பட்டிருந்த 1 பசு மாடு, இதே போன்று இரூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவருடைய வயலில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகளும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளன.
பெரம்பலூர்மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் அருகே செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சுபாஸ்ரீ (13). அங்குள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். கடந்த மே.19ம் தேதியன்று வீட்டிலிருந்த சிறுமி சுபாஸ்ரீ-யை அடையாளம் தெரியாத விஷப்பாம்பு கடித்துள்ளது. பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.