India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அருண் நேரு 30,026 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 10,691 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். ஐஜேகே 8331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் தற்போது வரை அருண் நேரு முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாரிவேந்தர் 8,331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர் பின்னடைவில் இருப்பது பாஜக கூட்டணிக்கு பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் அருண் நேரு 1,18,062 வாக்குகள் பெற்று 79,742 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 38,320 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 32,030 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் தேன்மொழி 22,294 வாக்குகள் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியின் இரண்டாம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் சுற்றில் திமுக வேட்பாளர் அருண் நேரு 29340 வாக்குகள் பெற்றுள்ளார்.அவர் சுமார் 19,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் முதல் சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. முதல் சுற்று நிலவரப்படி, திமுக (அருண்நேரு) – 29726 வாக்குகள், அதிமுக(சந்திரமோகன்)- 10464 வாக்குகள், பாஜக- (பாரிவேந்தர்) -7927 வாக்குகள், நாதக(தேன்மொழி) – 5691 வாக்குகள் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக – 55596 வாக்குகள் முதல் சுற்று நிலவரப்படி எண்ணப்பட்டுள்ளன .
பெரம்பலூர் தனியார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை என்று கூறி அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது நாதக கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவரான வெங்கடேஷ் என்பவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உணவு வழங்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டு
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 77.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் அருண்நேரு, அதிமுக சார்பில் சந்திரமோகன், பாஜக கூட்டணியில் பாரிவேந்தர், நாம் தமிழர் சார்பில் தேன்மொழி போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இதனால், மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக்கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் தமிழக அரசு உத்தரவின்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பந்தல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன். இவர் நேற்று இரவு தண்ணீர் பந்தல் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.